மீண்டும் ஒரு கம்ப்யூட்டர் புரட்சி! பழைய வேலைகள் காலி.. ஆனால் புதுசா வரப்போகுது லட்சக்கணக்கில் வாய்ப்பு!

Published : Jan 28, 2026, 05:20 PM IST

AI AI தொழில்நுட்பம் பழைய வேலைகளை மாற்றினாலும், வேளாண்மை மற்றும் நிதித்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட் தெரிவித்துள்ளார்.

PREV
15
AI

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் காரணமாக வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் பரவலாக நிலவி வருகிறது. இந்நிலையில், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட் (Ajay Kumar Sood) இதுகுறித்து முக்கியமான ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். "AI தொழில்நுட்பம் நிச்சயம் மீண்டும் மீண்டும் செய்யப்படும் (Repetitive) வேலைகளை மாற்றியமைக்கும். ஆனால், அதே சமயம் அது லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்" என்று அவர் நம்பிக்கையளித்துள்ளார்.

25
1990-களின் கணினி புரட்சி

இந்த மாற்றத்தை 1990-களில் கணினிகள் (Computers) அறிமுகமான காலத்தோடு ஒப்பிட்டுப் பேசிய அவர், "அப்போது கணினிகள் வந்தால் வேலை போய்விடும் என்று பயந்தோம். ரயில்வே ரிசர்வேஷன் போன்றவை கணினிமயமாக்கப்பட்டால் என்ன செய்வது என்று கவலைப்பட்டோம். ஆனால் நடந்தது என்ன? மக்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டனர், அது மிகப்பெரிய வேலைவாய்ப்புப் புரட்சியை ஏற்படுத்தியது. அதுபோன்ற ஒரு தருணத்தில்தான் இப்போதும் நாம் இருக்கிறோம்" என்று கூறினார்.

35
வேளாண்மை மற்றும் நிதித்துறையில் மாற்றம்

வேளாண்மை (Agriculture) மற்றும் நிதித்துறை (Finance) போன்ற துறைகளில் AI மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்று அவர் கணித்துள்ளார். இந்தத் துறைகளில் புதிய வகையான வேலைகள் உருவாகும். இதற்காக இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது (Reskilling) அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

45
சிறு நகரங்களில் AI ஆய்வகங்கள்

இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தை எதிர்கொள்ள மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் (Tier-2 and Tier-3 cities) உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் புதிய AI மற்றும் தரவு ஆய்வகங்களை (Data Labs) அமைத்து வருவதாக அஜய் குமார் சூட் தெரிவித்தார். இதன் மூலம் கிராமப்புற இளைஞர்களும் நவீன தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள முடியும்.

55
உலகளாவிய AI உச்சி மாநாடு

விரைவில் நடைபெறவுள்ள 'AI Impact Summit' என்ற உச்சி மாநாட்டிற்கு முன்னதாக அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் AI தொழில்நுட்பத்தின் எதிர்காலம் மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories