மாணவர்கள் தலையில் இடி இறங்கப்போகிறதா? - மெட்ராஸ் பல்கலைக்கழக முடிவை எதிர்த்து கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!

Published : Dec 02, 2025, 06:30 PM IST

Madras University ஓய்வூதியத்திற்காக கார்பஸ் ஃபண்டை எடுக்கும் சென்னை பல்கலைக்கழகத்தின் முடிவு 'நம்பிக்கை துரோகம்' என SPCSS-TN கண்டனம். இதனால் மாணவர் கட்டணம் உயரும் அபாயம் மற்றும் NEP 2020 சர்ச்சை குறித்து முழுமையாகப் படியுங்கள்.

PREV
14
Madras University மாணவர்கள் தலையில் இடி இறங்கப்போகிறதா?

சென்னை பல்கலைக்கழகம் தனது ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க, தனது உயிர்நாடியான 'கார்பஸ் ஃபண்ட்' (Corpus Fund) நிதியை உடைக்க முடிவெடுத்தது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. "இது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல்" என்றும், "அரசின் பொறுப்பற்ற தனம்" என்றும் சமூகப் போராற்றத்திற்கான மாணவர், பெற்றோர் மற்றும் குடிமக்கள் கூட்டு இயக்கம் (SPCSS-TN) கடுமையாகச் சாடியுள்ளது.

அரசின் பிச்சை தேவையில்லையா?

இந்த விவகாரம் குறித்து SPCSS-TN பொதுச்செயலாளர் P.B. பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்ட அறிக்கை அனலைக் கக்கியுள்ளது. "சென்னை பல்கலைக்கழகம் அரசிடம் பிச்சை எதுவும் கேட்கவில்லை. ஆனால், சிறப்பு சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, பல்கலைக்கழகத்தின் மீதான நம்பிக்கையை முழுமையாகச் சிதைக்கும் துரோகச் செயல்" என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

அரசு செய்ய வேண்டிய நிதியுதவியை மறுப்பது மற்றும் பல்கலைக்கழகத்தின் சேமிப்பைக் கரைப்பது, இறுதியில் யாரைப் பாதிக்கும் என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

24
மாணவர்கள் தலையில் விழும் சுமை!

"கார்பஸ் ஃபண்டை இப்போது எடுத்துவிட்டால், எதிர்காலத்தில் அதை எப்படி நிரப்பப் போகிறீர்கள்? பல்கலைக்கழகத்தின் மற்ற செலவுகளை யார் ஏற்பது?" என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு ஒரே வழி, மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை உயர்த்துவதுதான். ஏற்கனவே தேர்வுக் கட்டணம், மதிப்பீட்டுக் கட்டணம் அதிகமாக உள்ளது. இனி வரும் காலத்தில் இது இன்னும் உயர்ந்தால், ஏழை எளிய மாணவர்கள் எப்படிப் படிப்பார்கள்? இது மறைமுகமாக மாணவர்களுக்கு வைக்கப்படும் செக் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

34
கல்வி வியாபாரமாகிறதா?

பல்கலைக்கழகத்தின் செலவுகளை மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தைக் கொண்டுதான் சமாளிக்க வேண்டும் என்றால், அது "பொது நிறுவனம்" (Public Institution) என்ற தகுதியை இழந்து, ஒரு வியாபார நிறுவனமாக மாறிவிடும் என்று எச்சரிக்கிறார் கஜேந்திர பாபு.

"இதுதான் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் (NEP 2020) நோக்கம். 'காசு இருந்தால் படி' என்ற நிலையை உருவாக்கி, சமூக அநீதியை இழைப்பதே இதன் திட்டம்" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

44
சிண்டிகேட் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை மீறி, நியமன உறுப்பினர்கள் (Ex-officio members) முடிவுகளைத் திணிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஜனநாயகத் தன்மையை அழிக்கும் செயல் என்றும் கூறப்படுகிறது.

"மக்கள் வரிப்பணத்தில் உருவான நிறுவனங்களைக் காப்பது அரசின் கடமை. அரசு தவறும் பட்சத்தில், மக்கள் அதைத் தட்டிக் கேட்பார்கள்" என்று எச்சரிக்கையுடன் முடிகிறது அந்த அறிக்கை.

Read more Photos on
click me!

Recommended Stories