டீசல் இன்ஜின்கள் என்றாலே அதிக மாசுவை வெளியிடும் என்ற ஒரு பொதுவான கருத்து உள்ளது. ஆனால், அந்தக் கருத்தையும் குலாத்தி உடைத்தெறிந்தார். BS6 மாசு விதிகள் அமலுக்கு வந்த பிறகு, டீசல் கார்கள் கிட்டத்தட்ட பெட்ரோல் அல்லது சிஎன்ஜி கார்களைப் போலவே சுத்தமாகிவிட்டன என்று அவர் கூறினார். இப்போது, மாசுக் கட்டுப்பாட்டில் எல்லாமே ஒன்றுதான். மேலும், டீசல் கார்கள் சிறந்த செயல்திறனையும், நல்ல மைலேஜையும் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டொயோட்டாவின் பெரிய பிளான்
நாட்டில் பல முன்னணி கார் நிறுவனங்கள் டீசல் மாடல்களை முழுவதுமாக நிறுத்திவிட்ட நிலையில், டொயோட்டாவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஆனால் டொயோட்டாவின் திட்டம் சற்று வித்தியாசமானது. எலக்ட்ரிக் கார்கள், ஃப்ளெக்ஸ்-ஃப்யூவல், ஹைட்ரஜன் டெக்னாலஜி என பலவற்றிலும் நிறுவனம் பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறது. அதே சமயம், ஒரே ஒரு எரிபொருளை மட்டும் நம்பி இருக்க அவர்கள் விரும்பவில்லை. இந்தியாவின் ஆட்டோமொபைல் எதிர்காலம் முழுவதுமாக எலக்ட்ரிக் மயமாக இருக்காது, அது ஒரு "மல்டி-ஃபியூவல்" சிஸ்டமாக இருக்கும் என்று குலாத்தி தெளிவுபடுத்தினார். பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, ஹைப்ரிட் என அனைத்துமே தத்தமது பங்களிப்பைச் செய்யும் என்பதுதான் நிறுவனத்தின் பார்வை.