மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. கஸ்டமர் போல் வந்து அலேக்கா தூக்கிய போலீஸ்.!

By vinoth kumarFirst Published Jul 8, 2022, 2:08 PM IST
Highlights

இதனையடுத்து, சீருடை அணியாத போலீசார் உள்ளே சென்று சோதனை நடத்தினர். சோதனையில் போது 3 பெண்கள் ஒரு இளைஞர் இருந்தனர். அவர்களிடம்  நடத்திய விசாரணையில் 40 வயதுடைய சேலத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் இணையத்தின் மூலம் விபச்சார தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

திருச்செங்கோட்டில் ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து  மாறு வேடத்தில் சென்று அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ததனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வாலரை கேட் பகுதியில் ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடப்பதாக திருச்செங்கோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைக்க முடிவு செய்தனர். இதையடுத்து வாலரை கேட் அருகே உள்ள ரத்தினா டவரில் உள்ள 3வது மாடியில் மசாஜ் பார்லர் நடத்துவதாக எடுத்த ஒரு அறையில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க;- மும்பை அழகியை வரவழைத்து உல்லாசம்.. காரியம் முடிந்ததும் இளைஞர்கள் செய்த பகீர் சம்பவம்..!

இதனையடுத்து, சீருடை அணியாத போலீசார் உள்ளே சென்று சோதனை நடத்தினர். சோதனையில் போது 3 பெண்கள் ஒரு இளைஞர் இருந்தனர். அவர்களிடம்  நடத்திய விசாரணையில் 40 வயதுடைய சேலத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் இணையத்தின் மூலம் விபச்சார தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து, விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபச்சார தொழில் நடத்தி வந்த ஐஸ்வர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இணையத்தில் உள்ள லோகாண்டோ என்ற இணையதளம் மூலம் விபச்சாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க;-  கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கும் போது ஓயாமல் தொல்லை.. குழந்தையையின் கையை உடைத்த காமெறி பிடித்த தாய்.!

click me!