வீடு புகுந்த திருமணமான பெண்ணை உடலுறவுக்கு அழைத்த MLA உதவியாளர்.. பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்து கொடூரம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 19, 2022, 1:09 PM IST
Highlights

திருமணமான இளம்பெண்ணை வீடு புகுந்து எம்எல்ஏவின் உதவியாளர் கழுத்தை அறுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 
 

திருமணமான இளம்பெண்ணை வீடு புகுந்து எம்எல்ஏவின் உதவியாளர் கழுத்தை அறுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கைகளும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, இந்த வரிசையில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் இளம் பெண்ணை வீடு புகுந்த கழுத்தை அறுத்துள்ள கொடூரம் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ்  பகுதியை சேர்ந்தவர் சுராஜ், இவரது மனைவி நிஷா,  திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.

இதையும் படியுங்கள்:ஆபாச பேச்சு! அந்த இடத்தில் தொட்டு பேசி 14 மாணவிகளிடம் ஓயாத சில்மிஷம்! சேட்டை செய்த 62 வயது கிழவனுக்கு வேட்டு

ஆனால் நிஷாவுக்கு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதி சட்டமன்ற உறுப்பினர் மகாண்டி கோபிநாத்தின் தனிப்பட்ட உதவியாளர் விஜய சிம்ஹா என்பவருக்கும் இடையே ரகசிய தொடர்பு இருந்து வந்தது. இந்த விவகாரம் உஷாவின் கணவர் சுரஜ்க்கும் தெரியும், ஆனால் விஜய் சிம்ஹா சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் என்பதாலும், அரசியல் செல்வாக்கு, அட்யாட்கள் பலம் அதிகம் என்பதாலும் பயந்து சூரஜ் அதை கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: புருஷனை கழற்றிவிட்டு 2 கள்ளக்காதலனை க்ரெக்ட் செய்த பெண்! உல்லாசத்திற்காக போட்டா போட்டி! இறுதியில் நடந்த பகீர்

இந்நிலையில் இன்று அதிகாலை குடிபோதையில் நிஷாவின் வீட்டிற்கு விஜய்சங்கர் சென்றுள்ளார். அப்போது காலை நேரத்திலேயே தனது ஆசைக்கு இணங்குமாறு உஷாவை உடலுறவுக்கு ஆழைத்துள்ளார். ஆனால் நிஷா அதை மறுத்துவிட்டார், இதனால் ஆத்திரத்தில் உச்சத்துக்கே சென்ற விஜய் சிம்ஹா தான் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து காதலி உஷாவின் கழுத்தை அறுத்தார். பின்னர் உஷா ரத்த வெள்ளத்தில் மயங்கினார், அதையறிந்த சூரஜ் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தலைமறைவானார்.

இதைக் கண்ட கணவர் சூரஜ் மனைவி உஷாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். பொதுவாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், சம்பவம் நடந்த போது கணவர் எங்கிருந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தை செய்தது எம்எல்ஏவின் உதவியாளர் என்பதால் தெலுங்கான அரசியல் களத்தில் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது.  
 

click me!