காதலி ஆபாச வீடியோ லைவ்.. நண்பனுடன் சேர்ந்து காதலியை பலாத்காரம் செய்த கொடூர சம்பவம்

By Raghupati RFirst Published Jun 11, 2022, 7:09 PM IST
Highlights

காதலி உடன்பட மறுக்க, அந்த பெண்ணை 2 பேரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் உனது தந்தையையும், சகோதரரையும் கொன்று விடுவோம் என்று பெண்ணை மிரட்டியு உள்ளனர்.

பாலியல் பலாத்காரம்

மத்திய பிரதேசம் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் கடந்த ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவரும் லாலு சாஹு(20) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி வெளியே சுற்றி வந்துள்ளார்கள். ஒருகட்டத்தில் அந்த வாலிபர் ஒருநாள் காதலியை ஓட்டல் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அவர்களுடன் வாலிபரின் நெருங்கிய நண்பனான விவேக் யாதவ்வும் சென்றுள்ளான்.

அப்போது காதலன் லாலு சாஹு காதலிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளான். அது என்னவென்றால், அப்போது விவேக் யாதவுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு காதலன் லாலு சாஹு வற்புறுத்தியுள்ளான். இதற்கு காதலி உடன்பட மறுக்க, அந்த பெண்ணை 2 பேரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் உனது தந்தையையும், சகோதரரையும் கொன்று விடுவோம் என்று பெண்ணை மிரட்டியு உள்ளனர்.

ஆபாச வீடியோ

இதனால் பயந்து போன அந்த பெண் இதுகுறித்து வெளியில் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இருவரும் கடந்த ஒரு ஆண்டாக அந்த பெண்ணை பாலியல் சித்ரவதை செய்து அதனை செல்போனில் வீடியோவும் எடுத்தனர். அந்த வீடியோவை விவேக் யாதவ் தனது நண்பர்களுக்கு செல்போனில் லைவ் ஆக காட்டி உள்ளார்.இதனை அவனின் நண்பர்கள் பார்த்து ரசித்து வந்தனர். அதை அறிந்த அந்த பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தாள். ஆனால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டி தங்களது ஆசைக்கு இணங்க வைத்தனர். 

இது பல நாள்களாக தொடர்ந்து வந்தது. இந்தநிலையில் அவளுக்கு பெற்றோர் மாப்பிள்னை பார்த்து நிச்சயம் செய்தனர். இதை அறிந்த காதலனும் அவனது நண்பரும் இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர். அதன் பிறகுதான் இளம்பெண்ணின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிந்தது. இதுதொடர்பாக அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இரு வாலிர்கள் மீது கற்பழிப்பு மற்றும் கிரிமினல் மிரட்டல் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : Ration Shop : குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ! இனி கவலையில்லை மக்களே !!

இதையும் படிங்க : Vijay : நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லணும் ! ஆதீன விவகாரத்தில் கருத்து சொன்ன அர்ஜுன் சம்பத்

click me!