6 வயது சிறுமியை கொன்ற காமுகன்... 3 முறை பலாத்காரம் செய்ததாக பகீர் வாக்குமூலம்...!

By vinoth kumarFirst Published Apr 1, 2019, 10:57 AM IST
Highlights

கோவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான சந்தோஷ்குமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் 3 முறை  பலாத்காரம் செய்ததாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 

கோவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான சந்தோஷ்குமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் 3 முறை  பலாத்காரம் செய்ததாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடையில் 6 வயது சிறுமி 1-ம் வகுப்பு படித்து வந்தாள். இவள், கடந்த 25/ம் தேதி  திடீரென மாயமானாள். மறுநாள் காலையில் சிறுமியின் வீட்டின் எதிர்புறம் உள்ள சந்தில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடலில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

இதுபற்றிய அறிக்கையில் சிறுமி தொடர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மற்றும் 10 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சந்தேகத்தின்பேரில், பக்கத்து வீட்டில் வசிக்கும் சந்தோஷ்குமார்(32), அவருடைய நண்பர் மோகன்குமார்(35), கவுதமன்(28),  துரைசாமி(39), நந்தகுமார்(21), திவாகர் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். பின்னர் இவர்களில், சந்தோஷ்குமார்தான் கொலையாளி என்பது தெரியவந்தது. அவரை கைது விசாரணை நடத்திய போது 
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 

விசாரணையில் அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு: எனது ஊர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள உளியம்பாளையம். இன்டீரியர் டெக்கரேசன் தொழில் செய்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் ஒரு மாதத்தில் என்னுடைய  மனைவி பிரிந்து சென்று விட்டார். நான் தனியாக வசித்து வந்தேன். எனது பாட்டி அய்யம்மாளின் வீடு கஸ்தூரி நாயக்கன்புதூரில் உள்ளது (கொலையான சிறுமியின் பக்கத்து வீடு). பாட்டி தனியாக வசித்ததால் துணையாக  கடந்த 2 மாதமாக தங்கியுள்ளேன். அப்போது அந்த சிறுமியை அழைத்து பேச்சு கொடுத்து பழகினேன். நாளடைவில் பலாத்காரத்தில் ஈடுபட்டேன். 

ஏற்கனவே 2 முறை சிறுமியை பலாத்காரம் செய்துள்ளேன். கொலை நடந்த  அன்றும் பலாத்காரம் செய்தேன். சம்பவத்தன்று சிறுமி அலறினாள். அப்போது அவளை வீட்டுக்கு அனுப்பினால் பலாத்காரம் செய்தது வெளியே தெரிந்து விடும் என்று கருதினேன். எனவே, சிறுமியின் கழுத்தில் எனது டீ-சர்ட்டை  போட்டு நெரித்து கொன்றேன். பாட்டியின் வீட்டிற்குள் சடலத்தை மறைத்து வைத்திருந்தேன். வெளியில் ஆள் நடமாட்டம் இல்லாதபோது அங்குள்ள சந்து பகுதியில் கொண்டு சடலத்தை போட்டேன். சிறுமியின் சடலம்  கண்டெடுக்கப்பட்ட பின் போலீசார் என்னை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். 

கொலை செய்ததை நான் ஒப்புக் கொள்ளாமல் இருந்தேன். ஆனால் தீவிர விசாரணையில் நான் உண்மையை ஒப்புக் கொண்டேன்.  இவ்வாறு  வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து சந்தோஷ்குமார் நேற்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

click me!