உல்லாசமாக இருக்கும்போது நேரில் பார்த்த குழந்தை... உடலில் சிகரெட்டால் சூடு, காயங்களில் கிளறி சித்ரவதை!! கள்ளக்காதலன் தாய் செய்த கொடூரம்!!

By sathish kFirst Published Aug 29, 2019, 12:36 PM IST
Highlights

வேலூர் மாவட்டம் அரியூரில், 2 வயது குழந்தைக்கு உடல் முழுவதும் சிகரெட்டால் சூடுவைத்து கொடுமை படுத்திய தாயின் கள்ளகாதலனையும், உடந்தையாக இருந்த கல் நெஞ்சம் கொண்ட தாயையும் போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் அரியூரில், 2 வயது குழந்தைக்கு உடல் முழுவதும் சிகரெட்டால் சூடுவைத்து கொடுமை படுத்திய தாயின் கள்ளகாதலனையும், உடந்தையாக இருந்த கல் நெஞ்சம் கொண்ட தாயையும் போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியை சேர்ந்த பரிமளா என்ற பெண், தனது கணவனை பிரிந்து தாய் வீட்டில் தனது 2 வயது குழந்தையுடன் வசித்து வந்தார். தாயிடம் தனது 2 வயது குழந்தையை விட்டு அருகில் உள்ள செல்போன் கடையில் வேலைக்கு சென்று வந்த நிலையில், உடன் வேலை பார்க்கும் உதயகுமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த பழக்கம் தனிமையில் இருக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.

இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றித்திரிந்த தகவல் அறிந்து, தாய் அந்த பரிமளாவை  கண்டித்துள்ளார். இதையடுத்து தாயிடம் இருந்து பிரிந்து தனியாக வீடு எடுத்து வசிக்க தொடங்கி இருக்கிறார் பரிமளா. மகள் தனியாக சென்ற சில மாதங்களில் தாய் இறந்துவிட்டதால், தாயிடம் இருந்த தனது 2 வயது மகளை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் வருகை, வீட்டிற்கு வந்து சென்ற காதலன் உதயகுமாருக்கு கள்ளக்காதலியோடு உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்துள்ளது. இதனால் இவர்களுக்குள் சண்டை வந்துள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை அந்த சிறுமி பார்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், குழந்தை என்று பார்க்காமல் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அந்த சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்திய கள்ளகாதலன் உதயகுமார், சிறுமி எழுந்து ஓடிவிடக்கூடாது என்பதற்காக பாதத்திலும் சூடுவைத்துள்ளான். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் பாதுகப்பு மைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் கொடுமையைக் கண்டு அதிர்ச்சியில் கண்கலங்கி போயிருக்கின்றனர். குழந்தையில் அனைத்து உறுப்புகளிலும் சூடுவைத்ததோடு காயங்கள் ரணமாகவே இருந்து குழந்தை சாக வேண்டும் என்பதற்காகவே, அந்த காயங்களை மரக்குச்சியால் கிளறி வைத்த கொடூரத்தையும் அவன் செய்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

உடல் சுகத்துக்கு ஆசைப்பட்ட சிறுமியின் தாயை உடனடியாக கைது செய்த போலீசார், தப்பிச்சென்ற உதயகுமாரை 2 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின், கைது செய்து சிறப்பாக கவனித்தனர். குழந்தையிடம் அவர்கள் இருவரும் மிககொடூரமாக நடந்து கொண்டதால் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

click me!