மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை.. 12 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. விண்ணப்பிப்பது எப்படி..?

By Thanalakshmi VFirst Published Aug 12, 2022, 4:33 PM IST
Highlights

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள காலி புறத் தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
 

கல்வித்தகுதி: 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர் 12 ஆம் வகுப்பை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் தேதி: 

இன்று மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம். கடந்த மாதம் 29 ஆம் தேதி விண்ணப்பதிவு தொடங்கியது.

அனுபவம்:

குழந்தைகள் சார்ந்த வேலைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் பணி செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், உரிய கல்வி சான்றுகள், அனுபவ சான்றிதழ்களுடன் தங்களது விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.  மேலும் விண்ணப்பங்களை krishnagiri.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி: 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 
No.8 &10, DRDA வணிக வளாகம், 
மாவட்ட மைய நூலகம் எதிரில், 
கிருஷ்ணகிரி - 635002.
தொலைபேசி எண். 04343-292567, 6382613358 அல்லது

dcpokri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!