கால்நடை வளர்ப்போரின் சில பொதுவான சந்தேகங்களும் அதற்கான விடைகளும்…

 
Published : Jun 23, 2017, 12:27 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
கால்நடை வளர்ப்போரின் சில பொதுவான சந்தேகங்களும் அதற்கான விடைகளும்…

சுருக்கம்

Some common suspicions of livestock breeders and answers

1. மாட்டிற்கு மருந்து மாத்திரை வாயில் போடுவதற்கு ஆண்கள் இல்லாத சமயத்தில் அதை தீவனத்துடன் கலந்து கொடுக்கலாமா?

பதில்:

நிறைய தீவனத்துடன் கலந்து கொடுக்க வேண்டும். ஒரு சில மாடுகள் மருந்து கலந்ததால் அனைத்தையும் சாப்பிடாது. கொஞ்சமாக தீவனம் எடுத்து கலந்தும் கொடுக்கலாம்.

2. மாட்டிற்கு தீவனம் வைக்கும் போது அதிகமாக தண்ணீர் வைக்கலாமா அல்லது குறைந்த அளவு தண்ணீர் தான் கொடுக்க வேண்டுமா?

பதில்:

தீவனம் வைத்துவிட்டு அதிகமாக தண்ணீர் வைக்கலாம். தண்ணீர் அதிகம் வைப்பதினால் சிறுநீர் அதிகமாக வெளியேறும். உடலில் உள்ள கிருமிகளும் வெளியேற்றப்படும்.

3. கோழிக்கு அம்மை போட்டுள்ளது அதற்கு என்ன மருந்து போடலாம்?

பதில்:

அம்மை வந்த கோழியை மற்ற கோழிகளிடமிருந்து தனியாக பிரித்து விடவேண்டும். வேப்பிலைக்கொழுந்துடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவி விடவேண்டும். போரிக் பவுடரை தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவலாம்.

சின்ன வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மோரில் கலந்து கோழிகளுக்கு உண்ண கொடுக்கவேண்டும். அம்மை வரும் காலத்திற்கு முன் தடுப்பூசி போடுவது நல்லது.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?