கீரை சாகுபடி செய்தால் மாதத்திற்கு 60 ஆயிரம் வரை லாபம் பார்க்கலாம்…

 
Published : Sep 15, 2017, 01:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
கீரை சாகுபடி செய்தால் மாதத்திற்கு 60 ஆயிரம் வரை லாபம் பார்க்கலாம்…

சுருக்கம்

If you let the spinach grow well you can earn up to 60 thousand rupees per month ...

கிணற்றில் உள்ள தண்ணீரை வைத்து கூட, கீரை பயிரிடலாம். 50 சென்ட்டில் ,200 பாத்தி வரை அமைக்கலாம்.

ஒரு பாத்திக்கு 50 கிராம் விதையை தூவ வேண்டும். விதை தூவிய பின், தினமும் தண்ணீர் பாய்ச்சுவதோடு, களையெடுப்பு, உரம், பூச்சி மருந்து தெளித்து, முறையாக கவனித்து வர வேண்டும்.

ஒரு மாதத்திற்கு பின் கீரை நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாராகும். தண்டுகீரை, அரைக்கீரை, சிறு கீரை, பாலைக்கீரை, பருப்பு கீரை, வெந்தயகீரை, புளிச்சகீரை, பொன்னாங்கண்ணி கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை போன்று, மருத்துவ குணமுள்ள கீரைகளை அதிகளவில் பயிரிடலாம்.

நாள் ஒன்றுக்கு, 300 முதல் 500 கட்டு (ஒரு கட்டு 250 கிராம்) அறுவடை செய்யலாம். ஒரு கட்டு ரூ.10-க்கு விற்பதன்மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.3500 வருவாய் கிடைக்கும்.

உரம், பூச்சி மருந்து, விவசாய கூலியாட்கள் சம்பளம் என்ற விகிதத்தில் ரூ.1500 செலவு போக, தினமும் கீரை மூலம் ரூ.2000 வீதமும், மாதம் ரூ.60 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Farmer: விவசாயிகளே, மழை வருதுன்னு பயப்படாதீங்க! பயிர்களை காப்பாற்றும் 10 ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!