வீட்டில் இருக்கு பொருட்களை வைத்து இயற்கை பூச்சி கொல்லி செய்வது எப்படி?

Asianet News Tamil  
Published : Apr 19, 2018, 11:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
வீட்டில் இருக்கு பொருட்களை வைத்து இயற்கை பூச்சி கொல்லி செய்வது எப்படி?

சுருக்கம்

How to make natural pesticides...

வீட்டில் இருக்கும் இஞ்சி -  பூண்டு - மிளகாய் போன்றவற்றை வைத்து இயற்கை பூச்சி கொல்லி  செய்யலாம். 

எப்படி செய்வது? 

பூண்டு 1 kg எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக்கொள்ள வேண்டும். (ஜிலேபி பிழிவது போல் வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6லிட்டர் தண்ணீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6லிட்டர் கரைசல் தயார்.

இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500vமில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5 மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள்/செடிகள் மீது தெளித்தால்

புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.

காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும்.இதன் மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும்.

இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை. இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.

PREV
click me!

Recommended Stories

Uzhavar App Update: விவசாயிகளுக்கு குட்நியூஸ்! வேளாண் இயந்திரங்கள் எளிதில் வாடகைக்கு பெறலாம்! எப்படி தெரியுமா?1
Farmers Alert: விவசாயிகளுக்கு அலர்ட்..! மழை பெய்யும் முன் இதை செய்தால் மண் வளம் பல மடங்கு அதிகரிக்கும்