அசோலாவை வளர்க்கும், வளர்ச்சி மற்றும் கொடுக்கும் முறை இதோ…

Asianet News Tamil  
Published : Oct 03, 2017, 12:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
அசோலாவை வளர்க்கும், வளர்ச்சி மற்றும் கொடுக்கும் முறை இதோ…

சுருக்கம்

how to grow give the Azolla

அசோலாவை வளர்க்கும் முறை:

இரண்டு மீட்டர் அகலம், 4 மீட்டர் நீளம் கொண்ட சில்பாலிதீன் கவர். அதை ஒரு அரை அடி உயரம் கொண்ட பாத்திபோல் அமைத்து அதில் சலித்த செம்மண் ஒரு இஞ்ச் அளவிற்கு சம அளவில் பரப்ப வேண்டும்.

மேலும், 3 இஞ்ச் அளவிற்கு நீர் நிரப்பி அதில் 10 கிலோ பசுஞ்சாணம் நன்கு கரைத்து விடவேண்டும்.

பிறகு அசோலா விதைகளை அதில் தூவ வேண்டும். இது 6-7 நாட்களில் அந்த பாத்தி முழுவதுமாக வளர்ந்துவிடும். நமது தேவைக்கேற்ப பாத்திகள் அமைக்கலாம்.

அசோலாவின் வளர்ச்சி முறை:

விதைத்த 3 நாட்களில் எடை மூன்று மடங்காக பெருகும்.

பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும்.

15 நாட்கள் கழித்து நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.

அசோலாவை கொடுக்கும் முறை:

1. தினமும் 500கிராம்- 1 கிலோ அசோலாவை எடுத்து நீரில் அலசிக்கொள்ள வேண்டும்.

2. பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ அல்லது அடர் தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம்.

3. உணவு உப்புடன் சேர்த்தும் அளிக்கலாம்.

4. வைக்கோலுடன் சேர்த்தும் அளிக்கலாம்.

 

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!