கால்நடை வளர்ப்போரால் அடிக்கடி கேட்கப்படும் இந்த கேள்விகளுக்கு ஏற்ற பதில்கள் இதோ...

 
Published : Jan 22, 2018, 01:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
கால்நடை வளர்ப்போரால் அடிக்கடி கேட்கப்படும் இந்த கேள்விகளுக்கு ஏற்ற பதில்கள் இதோ...

சுருக்கம்

Here are answers to these questions that are often heard by the livestock breeders.

கேள்வி 1: 

ஆடு குட்டி போட்ட பின்பு, வாலில் புண் வருகிறது. அந்த புண்ணில் இருந்து புழுக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. எப்படி தடுப்பது?

பதில்

புண் உள்ள இடத்தில் டர்பண்டைடு ஆயிலை ஊற்றவும். இரண்டு மூன்று நிமிடங்களில் புழுக்கள் எல்லாம் வெளியே வந்து விடும். அதுபின்பு வேப்பண் கொழுந்து, கல் உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து வையுங்கள். ஒன்றிரண்டு நாட்களில் நன்றாகி விடும்.

கேள்வி 2: 

ராமேஸ்வரம் பகுதியில் ஆடு மற்றும் மாடுகள் மேய்ப்பதற்கு என்று மேய்ச்சல் நிலம் இல்லை. இதனால் அடிக்கடி பக்கத்து வயல்களில் ஆடு சென்று மேயும் போது பிரச்சனை வருகிறது. இதனை தவிர்க்க வீட்டிலேயே வளர்க்கும் வகையில் தீவனங்களை பரிந்துரைத்தால் நன்றாக இருக்கும்? 

பதில் :

ஆடு மற்றும் மாடுகள் பக்கத்து வயல்களில் சென்றும் மேயும் போது பிரச்சனை தான். இதனை தவிர்க்கும் விதமாக வீட்டுக்கு பக்கத்திலேயே அகத்தி செடி வளர்க்கலாம். பூவரம் செடி வளர்க்கலாம். கொடுக்கபுளி நன்றாக சாப்பிடும். அதனை எல்லாம் வளர்த்தால் பிரச்சனை இருக்காது. ஆட்டை கொட்டில் மாதிரி வைத்தும் வளர்க்கலாம். இவ்வாறு வளர்க்கும் போது குளம்பை சீவி வளர்க்கும் போது பிரச்சனை இருக்காது. 

தற்போது ஆடுகளுக்கு என்று தீவனங்கள் வந்திருக்கின்றன. அவற்றை வாங்கி ஒரு நாளைக்கு 100 கிராம் என்ற அளவில் பிரித்துக் கொடுங்கள். மேலும் மூன்று மாதங்களுக்கான இடைவெளியில் குடல்புழு நீக்கம் செய்யுங்கள். இதற்கு என்று மருந்து மாத்திரைகள் கால்நடை மருந்துக்கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி கொடுங்கள். 

அதிக ஆடுகள் வளர்க்கும் போது அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. தற்போது விவசாயிகள் ஆடு புழுக்கையை நல்ல உரமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் ஆடு வளர்ப்பிலும் நல்ல லாபம் பெறலாம்.

கேள்வி 3: 

ஆட்டுக்கு வயிறு ஊதி கொள்கிறது. இவ்வாறு வயிறு ஊதி, அசைப்போடாமல் சில ஆடுகள் மாண்டும் இருக்கின்றன. இதனை எவ்வாறு தடுக்கலாம்?

பதில்

ஆடுகளுக்கு வயிறு ஊதிப்போகும் போது கடலை எண்ணெய் 50 மில்லி கொடுங்கள். இந்த அளவு ஆட்டின் அளவை பொறுத்து கூட்டியும் குறைத்துக் கொள்ளலாம். 50 மில்லி என்பது இரண்டு முதல் மூன்று வயதுள்ள நல்ல ஆரோக்கியமான ஆட்டுக்கானது. சில ஆடுகள் இரவில் கத்திக் கொண்டே இருக்கும். பின்பு இறந்துவிடுவதற்கு காரணம் குடல்புழுவாகவும் இருக்கலாம். ஆகையால் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று குடல்புழு நீக்கத்துக்கான மருந்தை பெற்று, ஆட்டுக்கு கொடுங்கள்.

கேள்வி 4: 

ஆடு குட்டி போட்ட பின்பு, வாலில் புண் வருகிறது. அந்த புண்ணில் இருந்து புழுக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. எப்படி தடுப்பது?

பதில்

புண் உள்ள இடத்தில் டர்பண்டைடு ஆயிலை ஊற்றவும். இரண்டு மூன்று நிமிடங்களில் புழுக்கள் எல்லாம் வெளியே வந்து விடும். அதுபின்பு வேப்பண் கொழுந்து, கல் உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து வையுங்கள். ஒன்றிரண்டு நாட்களில் நன்றாகி விடும்.

கேள்வி 5: 

ஆட்டுக்கு வயிறு ஊதி கொள்கிறது. இவ்வாறு வயிறு ஊதி, அசைப்போடாமல் சில ஆடுகள் மாண்டும் இருக்கின்றன. இதனை எவ்வாறு தடுக்கலாம்?

பதில்

ஆடுகளுக்கு வயிறு ஊதிப்போகும் போது கடலை எண்ணெய் 50 மில்லி கொடுங்கள். இந்த அளவு ஆட்டின் அளவை பொறுத்து கூட்டியும் குறைத்துக் கொள்ளலாம். 50 மில்லி என்பது இரண்டு முதல் மூன்று வயதுள்ள நல்ல ஆரோக்கியமான ஆட்டுக்கானது. சில ஆடுகள் இரவில் கத்திக் கொண்டே இருக்கும். பின்பு இறந்துவிடுவதற்கு காரணம் குடல்புழுவாகவும் இருக்கலாம். ஆகையால் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று குடல்புழு நீக்கத்துக்கான மருந்தை பெற்று, ஆட்டுக்கு கொடுங்கள்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?