விதைகள் விஷயத்தில் விவசாயிகள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஏன்?

First Published May 25, 2018, 2:35 PM IST
Highlights
Farmers should be very careful in the case of seeds. Why?


விவசாயிகள் பலர் தரம் குறைந்த விதைகளை தனியாரிடம் வாங்கி ஏமாறுகின்றனர். விதை கொள்முதல் விஷயத்தில் விவசாயிகள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்

** உரிமம் பெற்ற விதை விற்பனை யாளர்களிடம் மட்டும் விதைகள் வாங்க வேண்டும்.

** வாங்கிய விதைக்குரிய விற்பனை பட்டியலை (ரசீது) கேட்டு வாங்கி பயிர் காலம் முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

** விற்பனை பட்டியலில் குறிப்பிட்டுள்ள பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் போன்றவற்றை சரி பார்த்து வாங்கவும்.

** விதை சிப்பத்தில் சான்றட்டை மற்றும் உற்பத்தியாளர் அட்டை கட்டுப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து வாங்க வேண்டும்.

** உண்மை நிலை விதை என்றால் அதில் விபர அட்டை உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும்.

** சான்று பெற்ற, பூச்சி நோய் தாக்குதலால் சேதம் அடையாத விதைகளை வாங்க வேண்டும்.

** திறந்த நிலையில் உள்ள மூடை, பை இருப்புகளில் இருந்து விதைகள் வாங்க வேண்டாம்.

** காலாவதி தினத்திற்குள் விதைக்க வேண்டும்.

click me!