Asianet News TamilAsianet News Tamil

கேரளா: வயநாடு தொகுதியில் ரோட் ஷோ நடத்திய ராகுல் காந்தி.!

தான் போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ரோட் ஷோ நடத்தினார் ராகுல் காந்தி.

தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. பிறகு ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் சென்ற ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையடினார்.

அதனை தொடர்ந்து ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு சென்றார். அங்கு அவர் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு ரோட் ஷோ நடத்தினார். சாலையெங்கிலும் திரண்டிருந்த பொதுமக்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்தி பொதுமக்களுக்கு கை கொடுத்து உற்சாகப்படுத்தினார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories