Asianet News TamilAsianet News Tamil

முடிஞ்சா தொட்டு பார்; வடமலாப்பூர் ஜல்லிக்கட்டில் வீரர்களை அலறவிட்ட விஜயபாஸ்கரின் கொம்பன் காளை

வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் கொம்பன் 2 காளை 15 நிமிடத்திற்கும் மேலாக களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை கவர்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், வடமலாப்பூரில்  நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் பங்கேற்றுள்ளார். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் 800 காளைகளும் 250 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காளைகள் பங்கேற்றுள்ளன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் 2 ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றன. குறிப்பாக அவரது கொம்பன் காளை 15 நிமிடத்திற்கும் மேலாக ககளத்தில் நின்று விளையாடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

Video Top Stories