Asianet News TamilAsianet News Tamil

உழைப்பாளர் தினம்; தொழிலாளர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்ற தனியார் நிறுவனம்

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தனது நிறுவன ஊழியர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்று அவர்களை மகிழ்ச்சி படுத்தி உள்ளது.

மே தினமான நேற்று உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள். மேலும் அரசு நிறுவனங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைத்து அரசியல் கட்சிகளும் மே தினத்தை கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுகின்றனர்.

இந்த நிலையில் இயற்கை விவசாயத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் சத்யம் பயோ நிறுவனத்தின் இயக்குனர் செந்தில்குமார் இந்த மே தினத்தில் தொழிலாளர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் அவர் நிறுவனத்தில் பணிபுரியும் 18 தொழிலாளர்களை தனது சொந்த செலவில் மதுரையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு சுற்றுலாவுக்கு அழைத்து சென்றுள்ளார். மூன்று வேலை உணவு அளித்து மீண்டும் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்திலேயே அழைத்து வருகிறார். 

இந்த நிகழ்வு இணையதளத்தில் வைரலாகி உள்ளதை அடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் செந்தில்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Video Top Stories