என்னைவிட குழந்தையிடம் கணவர் அதிக பாசம் காட்டியதால் கொன்றேன்! நாடகமாடிய தாய்! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
சோழவரத்தில் பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு நாடகமாடிய கொடூர தாயை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Thiruvallur Crime News
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் விஜயா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ்(25). இவர் சத்யா(22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 8 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை, மருத்துவமனையில் இருந்து சில நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Thiruvallur
இதனிடையே பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோயிலில் தீமிதி திருவிழா நடந்த நிலையில், கோயிலில் தீச்சட்டி எடுக்க ரமேஷ் சென்றுள்ளார். அப்போது, குழந்தையை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு சத்யாவும் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த குழந்தை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
Police investigation
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது உறவினர்கள் மற்றும் போலீசார் இணைந்து தேடிய போது அருகில் உள்ள கிணற்றில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சோழவரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Mother Arrest
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தாயே குழந்தையை கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தாயிடம் விசாரணை மேற்கொண்ட போது குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததால் வருங்காலத்தில் ஊனமாக மாறிவிடுமோ என்ற பயம் இருந்தது. தாய்ப்பாலும் சுரக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் கணவர் என்னை விட குழந்தையிடம் பாசத்தை காட்ட தொடங்கிவிட்டதால் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தேன் என்று பகீர் தகவலை கூறினார். இதனையடுத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.