Thalapathy Vijay: தன்னுடைய அம்மா ஷோபாவுக்காக தளபதி விஜய் கோவில் கட்டியுள்ளாரா? வைரலாகும் போட்டோ.!
தளபதி விஜய் சமீபத்தில் சாய் பாபா கோவிலில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வரும் நிலையில், அந்த புகைப்படம் விஜய் தன்னுடைய அம்மாவுக்காக கட்டிய சாய் பாபா கோவில் விஜய் எடுத்து கொண்டது சிலர் கொளுத்தி போட்ட தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
Thalapathy vijay
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய், தன்னுடைய தந்தை இயக்கத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், ஹீரோவாக மாறியவர். தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு எளிதாக கிடைத்து விட்டாலும், மக்கள் மனத்தில் தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக்கொள்ள பல வருடங்கள் ஆனது.
தற்போது தமிழகத்தில், யாரும் எட்ட முடியாத உச்சத்தில் உள்ள விஜய், அதிரடியாக சமீபத்தில் தன்னுடைய 'தமிழக வெற்றிக் கழகத்தின்' கட்சி பெயரை அறிவித்து, அரசியலில் ஈடுபட உள்ளதையும் உறுதி செய்தார்.
விஜயின் கட்சி தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவில்லை என்றாலும்... சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் இப்போதே துரிதமாக நடந்து வரும் நிலையில், விஜய் அடுத்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் படமே... கடைசி படம் என தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'கோட்' படப்பிடிப்பு முடிந்த உடனே துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது 'கோட்' படக்குழுவினர், இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றுள்ளனர். அங்கிருந்தபடி தளபதி விஜய் லெக் புஷ் ஸ்கூட்டர் ஓட்டுவது போல் வெளியிட்ட வீடியோவும் படு வைரல் ஆனது.
இது ஒருபக்கம் இருக்க தளபதி அண்மையில், சாய் பாபா கோவிலில் இருந்தபடி எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் பலர், இது தளபதி விஜய் தன்னுடைய அம்மாவுக்காக கோட்டூர் புறத்தில் கட்டி இருக்கும் சாய்பாபா கோவில் என கூறி வருகிறார்கள்.
இன்னும் சில, இது துபாய் சென்ற போது தளபதி விஜய் அங்குள்ள சாய் பாபா கோவிலில் எடுத்து கொண்டது என்றும், இன்னும் சிலர் இது... ஷீரடி சாய் பாபா கோவில் என்றும் கூறி வருகிறார்கள். உண்மையில்... இது எங்கு எடுக்கப்பட்டது என்பதை தளபதி தரப்பு தான் கூற வேண்டும்.