பாட யாரும் வாய்ப்பு தரல... ஹோட்டல்ல வேலைக்கு போறேன் - 200 ஹிட் சாங்ஸ் பாடிய பிரபல பாடகரின் பரிதாப நிலை
சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை பாடிய பாடகர் சத்யன் தற்போது தனக்கு பாட யாரும் வாய்ப்பு தரவில்லை என ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் பின்னணி பாடகர்கள் என்றால் பெரும்பாலும் ரியாலிட்டி ஷோ வாயிலாக வந்தவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக பல ஹிட் பாடல்களை பாடிய பாடகர்கள் இன்று வாய்ப்புகள் இன்றி தவித்து வருகின்றனர். அப்படி தமிழில் கழுகு படத்தில் இடம்பெறும் ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ பாடல் தொடங்கி, மாற்றான் படத்தில் வரும் தீயே தீயே, துப்பாக்கி படத்தில் குட்டி புலி கூட்டம் உள்பட 200க்கு மேற்பட்ட ஹிட் பாடல்களை பாடியவர் தான் சத்யன். அவர் சினிமாவில் தான் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் பற்றி மனம்விட்டு பேசி இருக்கிறார்.
கொரோனாவுக்கு அப்புறமா வாய்ப்புகள் எதுவுமே இல்ல. இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் யாரும் பாட அழைக்காததால் ஹோட்டல்ல வேலைக்கு சென்றிருக்கிறேன். ஹோட்டல் மெயிட்டனன்ஸ் வேலைக்கு சென்று சம்பாதிக்க தொடங்கினேன். அந்த வேலையை அமெரிக்காவில் சுமார் 4 மாதம் செய்தேன். பணத்தேவை அதிகரித்ததால் வேலைக்கு சென்றேன். குறிப்பாக பின்னணி பாடகர்களுக்கு வாய்ப்பு பெரியளவில் கிடையாது. பின்னணி பாடகர்களாக இருந்த நிறைய பேர், இந்த வேலையே வேண்டாம் என கூறிவிட்டு விவசாயம் பார்க்க சென்றுவிட்டார்கள்.
இதையும் படியுங்கள்... மகளின் திருமணத்தை குருவாயூர் கோவிலில் சிம்பிளாக நடத்தி முடித்த நடிகர் ஜெயராம் - வைரலாகும் போட்டோஸ்
இன்றைய காலகட்டத்தில் பாடகர்கள் சான்ஸ் கேட்டு அழைவதை விட பாப்புலர் ஆவதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் சென்றிருக்கிறேன், கெஸ்டாகவும் சென்றிருக்கிறேன். அந்த ரியாலிட்டி ஷோவில் நான் போட்டியாளராக கலந்துகொண்டால் பாப்புலர் ஆகலாம் என முடிவு செய்து அதில் கலந்துகொள்ள வாய்ப்பு கேட்டேன். ஆனால் அவர்கள் என்னை போட்டியாளராக களமிறக்கினால் பிரச்சனை வரும் என சொல்லி மறுத்துவிட்டனர்.
இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களே பாப்புலர் ஆனவர்களை தேடி தான் செல்கிறார்கள். வெகு சில இசையமைப்பாளர்களின் கச்சேரிகளை தான் அந்த இசையமைப்பாளர்களுக்காக மட்டும் வந்து பார்க்கிறார்கள். உதாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அனிருத். அவர்கள் கச்சேரி என்றால் அவர்களுக்காக மட்டும் மக்கள் வருகிறார்கள். ஆனால் மற்ற இசையமைப்பாளர்கள் நடத்தும் கச்சேரிகளில் பாடகர்கள் யார் வருகிறார்கள் என்பதையும் போடுகிறார்கள். அவர்களெல்லாம் யார் என்று பார்த்தால் பிரபல இசை நிகழ்ச்சி மூலம் பாப்புலர் ஆனவர்களாக இருக்கிறார்கள் என தன் ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார் சத்யன்.
இதையும் படியுங்கள்... Heroines : கோலிவுட் உலகை கலக்கிய டாப் 3 நாயகிகள்.. ஆனால் அழகில் அவர்களுக்கே போட்டியான மகள்கள் - Cute Photos!