நானாக விலகவில்லை! பிரியங்கா நல்காரி கதையை ஒரேயடியாக முடித்து வீட்டுக்கு அனுப்பிய ஜீ தமிழ்! அவரே போட்ட பதிவு!
சன் டிவி 'ரோஜா' சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரி 'நளதமயந்தி' தொடரில் இருந்து நானாக விலகவில்லை என, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
nala damayanthi Serial
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட சீரியல்களில் ஒன்று நலமயந்தி. பணத்தைவிட ஒருவரின் பசியை நீக்குவதே சிறந்தது என நினைக்கும் கதாநாயகிக்கும், எல்லாவற்றையும் பிஸினஸாக பார்க்கும் ஹீரோவுக்கும், எப்படி திருமணம் ஆகிறது என்பதே இந்த சீரியலின் விறுவிறுப்பான கதைக்களம்.
nala damayanthi Serial
இந்த தொடரில் 'சீதாராமன்' தொடரில் இருந்து விளக்கிய பின்னர், பிரியங்கா நல்காரி கமிட் ஆகி நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக பிரபல நடன இயக்குனர் நந்தா நடித்து வருகிறார். டிஆர்பி-யில் கொஞ்சம் பின் தங்கி இருந்தாலும், விறுவிறுப்பான கதைகளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது நளதமயந்தி தொடர்.
Ninaithen Vanthaai: எழிலால் ஷாக்கான மனோகரி.. சுடர் கொடுத்த பதிலடி! நினைத்தேன் வந்தாய் அப்டேட் !
nala damayanthi Serial
இந்நிலையில் 'நளதமயந்தி' தொடரில் இருந்து பிரியங்கா நல்காரி திடீரென விலகி விட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை உறுதி செய்வது போல், பிரியங்கா நல்காரி விபத்தில் சிக்கி இறப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றது. மேலும் மற்றொரு நாயகியாக தற்போது விஜய் டிவி, செந்தூரப்பூவே சீரியல் மூலம் அறிமுகமான ஸ்ரீநிதி என்ட்ரி கொடுத்துள்ளார். எனவே இனி ஸ்ரீநிதி - நந்தாவை மையமாக வைத்தே இந்த தொடர் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
nala damayanthi Serial
பிரியங்கா நல்காரி விலகியதாக வெளியான தகவலை தொடர்ந்து, தற்போது அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் போட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது. அதில், 'நளதமயந்தி' சீரியலில் இருந்து நானாக விலகவில்லை. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் திடீரென இப்படி நடந்துள்ளது. அதற்கு காரணம் தேவை... உங்கள் அனைவருக்கும் விரைவில் அது தெரியவரும் என பதிவிட்டுள்ளார்.
Priyanka Nalkari
பிரியங்காவின் இந்த பதிவின் மூலம், அவர் தொடரில் இருந்து விலகவில்லை, அவரை ஒரேடியாக விலக்கி உள்ளனர் என்பது தெரிகிறது. எனினும் சீரியல் தயாரிப்பு நிறுவனம் அல்லது இயக்குனரிடம் இருந்து இவரை வெளியேற்றியதற்கான விளக்கம் கிடைக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.