Ninaithen Vanthaai: எழிலுக்குள் இருக்கும் காதல்.! சுடருக்குள் ஏற்பட்ட மாற்றம் - நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் எழில், இந்து காதல் குறித்து வார்டனிடம் கேட்க பிளாஷ்கட் ஓபனான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது இந்துவை பார்த்த எழில் காதலில் விழ மறுநாள் காலையில் ரெடியா இரு என்று சொல்லி விட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் தன்னுடைய குடும்பத்தை கூட்டி சென்று ஸ்டேஜை டெக்கரேட் செய்து இந்துவை அறிமுகம் செய்து வைத்து சர்ப்ரைஸ் கொடுக்கிறான்.
இந்துவை தான் கல்யாணம் செய்து கொள்ள போவதாக சொல்லி குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க இந்துவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறாள். இதனையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என வார்டன் பிளாஷ்கட்டை சொல்லி முடிக்கிறார்.
இதை எல்லாம் கேட்ட சுடருக்கு எழில் மீது ஒரு சாப்ட் கார்னர் உருவாகிறது, கோவக்கார எழிலுக்குள் இப்படி ஒரு காதல் கதை இருக்கா என்று ஆச்சரியப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.