Ninaithen Vanthaai: எழிலின் காதல் குறித்து அறியும் சுடர்! லவ் டிராக்கில் நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் மனோகரி குழந்தைகளை நான் பார்த்துக்கிறேன் என்று வார்த்தையை விட கனகவல்லி சுடரை எழிலுடன் அனுப்பி வைத்த நிலையில் இன்று நடக்கப் பகுதி என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது எழில் மற்றும் சுடர் என இருவரும் ஆசிரமத்திற்கு வர பிள்ளைகள் எல்லோரும் ஓடிவந்து எழிலை வரவேற்கின்றனர். பிறகு எழிலுக்கு இந்து உடனான ஞாபகங்கள் வந்து போக அவன் பீல் ஆகிறான். பிறகு பிள்ளைகள் எல்லோரையும் சாப்பிட கூப்பிட எழில் வெறும் வெஜிடபிள்ஸ் தான் போடுவாரு. அதுக்கு நம்ப ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிடலாம் என்று சொல்கின்றனர்.
சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க என்று பிள்ளைகளை உட்கார வைத்து சுடர் சாப்பாட்டை பரிமாற எல்லோரும் ருசித்து சாப்பிடுகின்றனர். அடுத்ததாக எதில் பிள்ளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டிருக்க ஆசிரமத்தில் இருக்கும் சிஸ்டர் எழில் இந்து பற்றி சுடரிடம் பேசுகிறார்.
சுடர் அவங்களுடைய காதல் எப்படி ஆரம்பித்தது என்று கேட்க பிளாஷ் பேக் ஓப்பன் ஆகிறது. எழில் இந்துவை உயிருக்கு உயிராக நேசித்தது தெரிய வருகிறது. பணக்காரங்க பாதியிலேயே விட்டு போயிடுவாங்க ஆனால் எழில் அப்படி இல்லை என்று சொல்கிறார். ஃபிளாஷ் கட்டில் எழில் இந்துவிடம் நாளைக்கு ரெடியா இரு என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.