Isha Ambani: கருப்பு நிற மாடர்ன் உடையில்.. இரட்டை குழந்தைகளை இடுப்பில் வைத்து கொண்டு ஈஷா அம்பானி கொடுத்த போஸ்!
முகேஷ் அம்பானியின் மகள், ஈஷா அம்பானி தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்திய டாப் பணக்காரர்களில் ஒருவரான, முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்... சல்மான் கான், ஷாருக்கான், அமீர் கான், சைப் அலிகான், போன்ற பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
அதே போல் சர்வதேச அளவில் பிரபலமான பாப் பாடகியான ரிஹானாவும் கலந்து கொண்டார். இவர்களை தவிர, சுந்தர் பிச்சை, மார்க் ஸூபர்பர்க், கோடக் மஹிந்திரா நிறுவனர், போன்ற பல தொழிலதிபர்கள் மற்றும் இந்திய அளவில் பிரபலமான நபர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு... ஆனந்த் - அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டை வாழ்த்தினர். மேலும் இவர்களின் திருமணம், ஜூலை மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து சமீபத்தில், ஈஷா அம்பானி தொகுத்து வழங்கிய ரோமன் ஹோலி நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது. இதில் பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதில் பங்கேற்ற அனைத்து பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் அம்பானியின் வீட்டில் இரவு விருந்தும் அழைக்கப்பட்டது.
தற்போது ஈஷா அம்பானியின் தாய் பாசத்தை பிரதிபலிக்கும் விதத்தில், சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பிரத்தியேகமாக டிசைன் செய்யப்பட்ட.. கறுப்பு நிற உடையில் இருக்கும் இஷா தன்னுடைய இரட்டை குழந்தைகளான ஆதியா மற்றும் கிருஷ்ணாவுடன் போஸ் கொடுத்தார்.
இந்த புகைப்படங்களை, பிரபல ஒப்பனையாளர் அனிதா ஷ்ராஃப் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதை பார்த்து, நெட்டிசன்கள் பலர் கோடி கோடியாக பணம் இருந்தாலும், குழந்தைகளுக்கு அம்மா தானே... என்றும் இதில் ஈஷாவின் தாய் பாசம் பிரதிபலிப்பதாக கூறி வருகிறார்கள்.