56 வயதிலும் தங்க புடவையில் தகதகவென மின்னிய ரஜினி பட நடிகை... அதன் விலை இத்தனை லட்சமா?
56 வயதாகும் ரஜினி பட நடிகை ஒருவர் லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நிற புடவை அணிந்து கடைதிறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
சினிமா பிரபலங்கள் தங்கள் அழகாலும், இளமையாலும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். முன்பெல்லாம் சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளின் ஆயுட்காலம் குறைவாக இருந்து வந்தது. அதிகபட்சம் 10 ஆண்டுகளில் நடிகைகள் காணாமல் போய்விடுவர். அப்படி இருந்த காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்து, இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த நடிகைகள் ஒரு சிலரே, அவர்களின் ஒருவர் தான் நடிகை மாதுரி தீக்ஷித்.
பாலிவுட் நடிகையான இவருக்கு தற்போது 56 வயது ஆனாலும், இன்றளவும் குறையாத இளமையுடன் செம்ம யங் ஆக காட்சியளிக்கிறார் மாதுரி. 1980-களில் டாப் ஹீரோயினாக கொடிகட்டிப்பறந்த மாதுரி தீக்ஷித் உடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடனும் நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் உத்தன் தக்ஷித் என்கிற இந்தி படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. இதுதவிர பாலிவுட்டின் உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் மாதுரி.
இதையும் படியுங்கள்... Ghilli : ரெக்கார்ட் பிரேக்கிங் வசூல்.. ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டிய கில்லி - முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
இந்த நிலையில், 56 வயதிலும் இளமை குறையாமல் இருக்கும் மாதுரி தீக்ஷித் அண்மையில் சூரத்தில் கடை திறப்பு விழா ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அவரை காண குவிந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கடை திறப்பு விழாவுக்கு நடிகை மாதுரி தீக்ஷித் அணிந்து வந்த சேலை தான் தற்போது செம்ம டிரெண்டிங் ஆக உள்ளது. அதுமட்டுமின்றி அதன் விலை விவரம் தெரிந்தால் நீங்களே ஷாக் ஆகிவிடுவீர்கள்.
அதன்படி, மாதுரி தீக்ஷித் அணிந்து வந்த கோல்டன் நிற சேலையில் விலை ரூ.1.25 லட்சமாம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். நடிகை மாதுரி தீக்ஷித் திருமணத்துக்கு பின்னர் நடிப்பதை நிறுத்திவிட்டாலும், ரியாலிட்டு ஷோக்களில் பங்கேற்று வருகிறார். தன்னுடைய அழகை மெருகேற்றிக் கொண்டே இருக்கும் மாதுரி, பேஷனிலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறார் என்பதற்கு அவர் அணியும் ஆடைகளே உதாரணம்.
இதையும் படியுங்கள்... பல வருடங்களுக்கு பின் ரஜினியுடன் கை கோர்க்கும் நடிகர்! பட் இது வேற லெவல் காம்போ? சம்பவம் செய்ய போகும் லோகி!