Maavilai Vastu : இதை செய்தால் போதும்.. வீட்டில் செல்வ செழிப்புடன், பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைக்கும்..
மா மரத்தை எந்த திசையில் வளர்த்தால் செல்வ செழிப்பு கிடைக்கும் என்றும், மா இலைகளின் பலன்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி மிகவும் மங்களகரமான மர வகையில் ஒன்றாக மா மரம் கருதப்படுகிறது. மா மரத்தை எந்த திசையில் வளர்த்தால் செல்வ செழிப்பு கிடைக்கும் என்றும், மா இலைகளின் பலன்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
mango leaf
ஆன்மீக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மரங்களில் மா மரமும் ஒன்று. இந்த மா இலைகளில் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. முக்கனிகளில் முதல் கனியாக வரும் மாம்பழத்தின் மரத்தில் இலைகள் உங்கள் வாழ்வில் செழிப்பை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி மா இலைகள், துரதிர்ஷ்டத்தை போக்கி அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் இருக்கும் வறுமையை போக்கி செல்வ செழிப்பை கொண்டு வரும் என்றும் நம்பப்படுகிறது.
mango leafs
அதன்படி வீட்டின் தென் மேற்கு திசையில் மாமரத்தை வளர்ப்பது செல்வ செழிப்பை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் நேர்மறை சக்தி அதிகரிப்பதுடன் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
எனினும் வீட்டின் அருகே உயரமான மாமரங்களை வளர்க்ககூடாது எனவும், வீட்டின் மீது மாமரத்தின் நிழல் விழக்கூடாது என்றும் கூறப்படுகிறது.
வீட்டில் எந்த பூஜை செய்தாலும் மாமர இலைகளை தண்ணீரில் நனைத்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதன் மூலம் வீட்டின் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
mango leaf
வீட்டின் வாசலில் மாவிலை தோரணத்தை கட்டுவதால் எதிர்மறை எண்ணங்கள், தீய சக்திகளின் பாதிப்புகளை குறைக்கலாம். மாவிலை தோரணம் கட்டுவதால் வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளும் கட்டுக்குள் இருக்கும்.