கார்த்தியை லேடி ஹிட்லர் ரம்யாவிடம் சிக்க வைக்கும் ரியா... கார்த்திகை தீபம் சீரியலில் எதிர்பாரா திருப்பம்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா பிளான் போட்டு ரியாவை சிக்க வைத்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.
Karthigai deepam serial
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா பிளான் போட்டு ரியாவை சிக்க வைத்து பரிகாரம் என்ற பெயரில் அங்கப்பிரஷனம் செய்ய வைக்கும் கையில் அக்னி குண்டத்தை கொடுத்து அலறவிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Zee Tamil Karthigai deepam serial
அதாவது மூன்றாவது பரிகாரமாக உப்பை போட்டுவிட்டு அதன் மீது முட்டி போட்டு நடக்க வேண்டும் என்று சொல்ல, ரியா முடியாது என்று மறுக்க, தீபா நீ பண்றியா இல்ல மீனாட்சி அக்காவை வர சொல்லவா என்று கேட்டு பரிகாரத்தை பண்ண வைக்கிறார். அதன் பிறகு ஐஸ்வர்யா, ஆனந்த் மற்றும் ரியா ஆகியோர் கூட்டு சேர்ந்து கார்த்திக்கை இதே கம்பெனியில் வச்சிருந்து வேலை வாங்க முடியாது இங்கு அவனுக்கு முதலாளி என்பதால் ராஜமரியாதை தான் கிடைக்கும் என்று சொல்கிறார் ஐஸ்வர்யா.
இதையும் படியுங்கள்... இதயம் தொட்ட தொடராக அண்ணா சீரியல்... கார்த்திக் ராஜுக்கு மாஸ் விருது - கோல்டன் அவார்ட்ஸ் பார்ட் 2 ஹைலைட்ஸ்
Karthigai deepam serial Update
ஆனந்த் அப்படின்னா என்ன செய்வது என்று யோசிக்க, ரியா வேற ஒரு கம்பெனிக்கு அனுப்பலாம் என்று ஐடியா கொடுக்கிறாள். மேலும் எனக்குத் தெரிந்த ஒரு கம்பெனி இருக்கு. அந்த கம்பெனியோட சிஇஓ என் பிரண்டு ரம்யா தான். அவ ஒரு லேடி ஹிட்லர் அவகிட்ட கார்த்திக் மாட்டுனா ரொம்ப கஷ்டப்படுவான் என்று சொல்ல, ஆனந்த் சூப்பர் ஐடியா என பாராட்டுகிறான். அடுத்து அப்படியே ப்ளாஷ் கட் ஓப்பனாக அதில் ரம்யா கம்பெனிக்கு காரில் ஹாரன் நடித்துக் கொண்டே இருக்க செக்யூரிட்டி கதவைத் திறக்காமல் இருக்கிறார்.
Karthigai deepam serial Today Episode
லேட்டாக ஓடி வந்து மன்னிப்பு கேட்க, நான் இந்த டைமுக்கு வருவேன்னு தெரிஞ்சும் ஏன் கேட்ல இல்ல என்று கேள்வி கேட்க, குடும்ப பிரச்சினை காரணமாக போனில் பேசிக்கொண்டு இருந்ததாக சொன்ன அவரை டிஸ்மிஸ் செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... Ramya Pandian: கருப்பு சேலையில்... நெஞ்சில் பாரதி கவிதையை சாய்த்தபடி, புதுமை பெண்ணாக மாறிய ரம்யா பாண்டியன்!