இனி வீட்டிலேயே கஞ்சா செடி வளர்க்கலாம்.. அரசு அனுமதி.. எங்க தெரியுமா..?
ஜெர்மன் அரசாங்கமே கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதி வழங்கியுள்ளது. முழுமையான விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்..
நம்முடைய நாட்டில் கஞ்சா செடி பயிரிடப்படுவது தெரிந்தால் போலீசார் உடனே கைது செய்வார்கள். ஏனெனில், அது வளர்ப்பது குற்றம். ஆனால், ஒருவர் வீட்டில் 3 கஞ்சா செடிகளை வளர்க்கலாம் மற்றும் ஒரு நாளைக்கு 25 கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம் என்று ஜெர்மன் நாடாளுமன்றம் சட்டம் ஒன்று இயற்றியுள்ளது.
ஜெர்மன் நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறியும், இதன் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கும் சட்டம் அரசு தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின் உரிமையுடன் ஒருவர் வீட்டில் 3 கஞ்சா செடிகளை சட்டப்பூர்வமாக வளர்க்கலாம். மேலும், ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் 25 கிராம் வரை கஞ்சாவை எடுத்துக்கொள்ளலாம்.
கஞ்சாவை உபயோகிப்பதற்கு என்று ஒரு குழுவை நியமிப்பதாக அரசு கூறியுள்ளது. அதில், அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே சட்டப்பூர்வமாக கஞ்சாவை எடுத்துக்கொள்ள முடியும் என்று குழு கூறியது.
இதையும் படிங்க: ஷாக்கிங் நியூஸ்! சென்னையில் 2 ஆண்டுகளாக ஜோராக நடந்து வந்த கஞ்சா கேக்! அடிமையான மாணவ, மாணவிகள்.. வெளியான பகீர்
சமீபகாலமாக, ஜெர்மனிய இளைஞர்கள் மத்தியில் கஞ்சா சாப்பிடுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாக் மார்க்கெட்டில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதை தடுத்து சட்டப்பூர்வமாக்கினால் மட்டுமே, பிளாக் மார்க்கெட் கஞ்சா விற்பனையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நாளை முதல் வாரத்தில் 4 நாள் தான் வேலை.. சொன்னபடி ஊதியம்.. எங்கு தெரியுமா..?
ஆனால், இந்த சட்டத்திற்கு நாட்டின் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மால்டா, லக்சம்பர்க் நாடுகளைத் தொடர்ந்து, தற்போது ஜெர்மனிப்கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இந்நிலையில், கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க நெதர்லாந்தும் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D