Abbas About Son: பெத்த பிள்ளையை தனக்கு பிறந்தவனா என சந்தேகப்பட்ட அப்பாஸ்! DNA பரிசோதனையில் தெரிய வந்த உண்மை!
90-களில் பல இளம் ரசிகர்களின் கனவு கண்ணனாக வலம் வந்த சாக்லேட் பாய்யான அப்பாஸ், சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய மகன் தனக்கு பிறந்தவனா என சந்தேகப்பட்டேன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இயக்குனர் கதிர் இயக்கத்தில், கடந்த 1996-ம் ஆண்டு வெளியான 'காதல் தேசம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். இந்த படத்தில் வினீத் மற்றொரு நாயகனாக நடித்திருந்த நிலையில் இவர்கள் இருவருக்குமே இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நடிகை தபு கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இதை தொடர்ந்து, அடுத்தடுத்து அபாஸை காதல் நாயகனாகவே காட்டும் படங்களே இவருக்கு கிடைத்தது. மேலும், இவர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், படையப்பா, ஹேராம், மின்னலே, ஆனந்தம், பம்மல் கே சம்மந்தம் என அடுத்தடுத்த படங்கள் வெற்றிப்படமாக மாறியது.
ஒரு கட்டத்திற்கு பின்னர் இவர் தேர்வு செய்து நடித்த படங்கள், அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. மேலும் திரையுலகில் இவருக்கு எதிராக நடந்த துரோகம்... இவரை ஒட்டுமொத்தமாக திரையுலகை விட்டு விலகும் முடிவை எடுக்க வைத்தது.
திரையுகில் இருந்து விலகி தன்னுடைய குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆனார் அப்பாஸ். அங்கு பல கூலி வேலைகள் செய்து தன்னுடைய குடும்பத்தை காற்றிய தகவலை, சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டி அளித்தபோது கூறினார். மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தயாராகி உள்ள அப்பாஸ், தன்னுடைய மகன் பற்றி கூறிய தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அப்பாஸ் இடம் அவரது மகன் குறித்து கேள்வி எழுபட்டது. இதற்கு பதில் கூறிய அவர் 'என் மகன் மிகவும் அமைதியான ஒருவர. நான் அவருடைய வயதில் கூத்து கலாட்டா எல்லாம் பண்ணிட்டு இருந்தேன். ஆனால், என் மகன் அப்படி கிடையாது. ரொம்ப சிம்பிள், Mature-ஆக இருக்கிறார். அதனால் எனக்கே இவர் என் மகன் தானா என சந்தேகம் வந்தது. DNA செக் பண்ணும்போது என் பையன் தான் உறுதியாகி விட்டதாக கூறியுள்ளார்.