மதுப்பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. மதுபான கடைகளுக்கு விடுமுறை.. எப்போது தெரியுமா?
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21 ம் தேதி நகர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மது கடைகள், மதுக்கூடங்கள்மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Thiruvarur temple azhi therottam
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆழித்தேரோட்டம் மார்ச் 21ம் தேதி நடைபெற உள்ளது.
School holiday
இதனை முன்னிட்டு மார்ச் 21ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Thiruvarur district collector
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் வரும் 21ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருவாரூர் நகர் பகுதியில் செயல்படும் மதுக்கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியார் மது கடைகள் ஆகியவற்றிற்கு ஒருநாள் விடுமுறை தினமான அறிவித்துள்ளார்.
TASMAC
உத்தரவை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மதுபான கடைகளின் மேற்பார்வையாளர் மற்றும் மதுபான கடைகளின் மேற்பார்வையாளர் மற்றும் மது கூடங்களின் ஏலதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.