பிக்பாஸ்ஸில் வெடிக்கும் நித்யா குடும்ப பிரச்சனை...! சாக்கடை என திட்டிய பாலாஜி...!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் விதத்தில் மூன்று ப்ரோமோக்கள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
முதல் சீசனுக்கு இருந்த ஆர்வம், இரண்டாவது சீசனுக்கு இல்லை என்றாலும், இனி வரும் நாட்களில் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், நடிகை மும்தாஜ், பாலாஜியிடம் வந்து ஏன் உங்கள் மீது நித்யா இவ்வளவு கோபமாக இருக்கிறார் என்று கேள்வி எழுப்புகிறார். இதற்கு பாலாஜி, "ஒருவருக்கு சுதந்திரம் கொடுக்க ஒரு எல்லை உள்ளது என்று கூறி தன்னுடைய குடும்ப பிரச்னையை மும்தாஜுடம் பகிர்ந்துக்கொள்கிறார்".
இதைதொடர்ந்து, பாலாஜியிடம் சென்ராயன் வந்து "உனக்கும், தங்கச்சிக்கும் நடுவில் ஸ்கூப் செய்பவர்களை, கண்டு பிடித்து பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறுகிறார்". இதற்கு பாலாஜி சாப்பிடும் நேரத்தில், சாக்கடையை பற்றி ஏன் பேசுற, எல்லா சாக்கடையும் சேர்த்து தான் கூறுவதாக மிகவும் கோபமாக கூறுகிறார்.
பாலாஜி இப்படி கூறியிருப்பது அவருடைய மனைவி நித்யாவையும் சேர்ந்து தான் என பலர் கூறி வருகிறார்கள். மேலும் பிக் போஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் தற்போது நித்யா - பாலாஜி குடும்ப பிரச்சனையைத்தான் தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய #பிக்பாஸ் இன் அடுத்த ப்ரோமோ! #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/qEyFuj3aBm
— Vijay Television (@vijaytelevision) June 20, 2018