Asianet News TamilAsianet News Tamil

’யாருக்குங்க இந்த மனசு வரும்?’...பா.ரஞ்சித் 6 மணிக்கு அறிவிக்கப்போற டைரக்டர் இவர்தான்...

தனது உதவி இயக்குநர்கள்  சொந்தமாகப் படம் இயக்கிவிடாமல் காலத்துக்கும் தன்னிடம் அடிமையாகவே இருக்கவேண்டுமென்று நினைக்கிற தமிழ்சினிமா சூழலில்,  பிறந்தநாள் பரிசாக தனது உதவி இயக்குநருக்கு படம் இயக்க வாய்ப்பு வழங்கி தான் ஒரு உயர்ந்த மனிதன் என்று நிரூபித்திருக்கிறார் பா.ரஞ்சித்.

director pa.ranjith announces his next project
Author
Chennai, First Published Dec 8, 2018, 1:26 PM IST

தனது உதவி இயக்குநர்கள்  சொந்தமாகப் படம் இயக்கிவிடாமல் காலத்துக்கும் தன்னிடம் அடிமையாகவே இருக்கவேண்டுமென்று நினைக்கிற தமிழ்சினிமா சூழலில்,  பிறந்தநாள் பரிசாக தனது உதவி இயக்குநருக்கு படம் இயக்க வாய்ப்பு வழங்கி தான் ஒரு உயர்ந்த மனிதன் என்று நிரூபித்திருக்கிறார் பா.ரஞ்சித்.director pa.ranjith announces his next project

’காலா’இயக்குநர் ரஞ்சித்துக்கு இன்று 37 வது பிறந்தநாள்.  பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு தனது நீலம் புரடக்ஸின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட இருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார். அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான, மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ வசூல், மற்றும் விருதுகளை அள்ளிக் குவித்த நிலையில் இரண்டாவது படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.director pa.ranjith announces his next project

இந்நிலையில் ரஞ்சித்தின் இரண்டாவது படத்தை இயக்கவிருப்பவர் அவரது உதவி இயக்குநர் அதியன் ஆதிரைதான் என்பது தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கம்யூனிஷ சிந்தனை கொண்ட கவிஞரான ஆதிரை பா.ரஞ்சித்திடம் ‘மெட்ராஸ்’,’கபாலி’ படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

Follow Us:
Download App:
  • android
  • ios