"ஷூட்டிங்ல மட்டும் அம்மா".. 'இரவில் போதைப்பொருள்'...! ஸ்ரீ ரெட்டியை அடுத்து களமிறங்கிய சந்தியா நாயுடு..!
காலை நேர படபிடிப்பில் என்னை அம்மா என்று அழைப்பவர்கள், இரவு நேரத்தில் என்னை போதை பொருளாக பார்க்கிறார்கள் என துணை நடிகையான சந்தியா நாயுடு தெரிவித்து உள்ளார்
பெண் என்றாலே பாலியல் தொல்லை இருக்கும் என்ற கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக பல பெண்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் .
கடந்த இரண்டு வார காலமாக, ஆந்திர நடிகை ஸ்ரீ ரெட்டி பற்றி செய்திகள் தான் அனைத்திலும் தலைப்பு செய்திகளாக இருந்தது
ஸ்ரீ ரெடியின் அசராத அதிரடியான நடவடிக்கையால், ஆடி அடங்கி போன தெலுங்கு நடிகர் சங்கம்.ஸ்ரீ ரெட்டிக்கு விதித்து இருந்த தடையை நீக்கி யது.
அவருடன் யாரும் நடிக்கக்கூடாது என விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்காமல் இருந்து இருந்தால்,அடுத்தடுத்து பல பிரபலங்களின் மானம் கப்பல் ஏறிவிடும் என நினைத்தால், உடனடியாக ஸ்ரீ ரெட்டிக்கு விதித்திருந்த தடையை நீக்கியது தெலுங்கு நடிகர் சங்கம்
இதனை தொடர்ந்து ஸ்ரீ ரெட்டி,தன்னுடன் நடித்து வரும் சில துணை நடிகைகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது துணை நடிகையான சந்தியா நாயுடு செய்தியாளர்கள் சந்திப்பில், 10 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகிறேன்...
பொதுவாக அம்மா அல்லது அத்தை அண்ணி உள்ளிட்ட ரோல்களில் நான் நடித்து வருகிறான்.
காலை வேளை நடிப்பில், என்னை அம்மா என அழைத்தவர்கள் இரவில் படுக்கைக்கு அழைப்பார்கள்.
காலையில் ஒரு அம்மாவாக அவர்களுக்கு காட்சி அளித்த நான், இரவில் அவர்கள் கண்ணனுக்கு ஒரு போதை பொருளாக தெரிகிறது என வேதனை தெரிவித்து உள்ளார்