Asianet News TamilAsianet News Tamil

செஞ்சந்தன மரத்திற்கு செம்மண்தான் ஏற்றது. மகத்தான் வளர்ச்சியை உடனே பார்க்கலாம்...

red sand is perfect for red sandal wood
red sand is perfect for red sandal wood
Author
First Published Dec 16, 2017, 12:46 PM IST


 

செஞ்சந்தனத்தை இரண்டு ஏக்கரில் மானாவாரியாக சாகுபடி செய்திருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், கீழக்குறிச்சி கிராமத்தைச் 

'செம்மண் பூமியில் மானாவாரியா ரெண்டு ஏக்கரில் செஞ்சந்தனத்தை சாகுபடி செய்யலாம். நடவு செய்த மூன்று வருடத்திலே செஞ்சந்தனம் நல்லா வளர்வதை பார்க்கலாம்.

இதற்கு பாசனம்னு தனியா தேவையில்லை. செஞ்சந்தனத்தைப் பொறுத்தவரை மரங்கள்ல கிளையடிக்க விடக்கூடாது. அப்பப்ப கவாத்து செய்துவிட வேண்டும். இந்த மரத்திற்கு நல்ல சந்தை வாய்ப்பு இருப்பதால் எப்பவும் இது டாப்பு தான். 

அறுவடைக்குத் தயாரான செஞ்சந்தன மரங்கள் நல்ல விலைக்கு போகும். சுமார் 100 செஞ்சந்தன மரங்க இருக்கிறது என்றால் வசூல் வேட்டை தான்.  ஆம். டன் ஐந்து இலட்சம் போகும். 

நீங்க இப்போ நட ஆரம்பித்தால் எதிர்காலத்தில் கோடிக்கணக்கில் மதிப்பு போகும். 

இந்தியாவில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில்தான் இந்த மரம் அதிகமாக வளர்க்கப்படுகிறது. ஜப்பான், தைவான், சீனா போன்ற நாடுகளில் இதன் தேவை அதிகம் உள்ளதால், சந்தை எப்போதும் சரியாது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios