Cricket

கோலி முதல் பாண்டியா வரை: சாம்பியன்ஸ் டிராபியை கொஞ்சி மகிழும் வீரர்கள்

சாம்பியன்ஸ் கோப்பை 2025 வென்ற இந்தியா

நியூசிலாந்தை இறுதிப் போட்டியில் வீழ்த்தி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பட்டத்தை இந்தியா கைப்பற்றியது. வெற்றியால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கோப்பையுடன் வீரர்களின் புகைப்படம்

கோப்பை வென்ற பிறகு இந்திய வீரர்கள் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். கோப்பையுடன் புகைப்படம் எடுத்த 5 வீரர்களைப் பார்ப்போம்.

வருண் சக்ரவர்த்தி

வருண் சக்ரவர்த்தி சிறப்பாக விளையாடி 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதிப் போட்டிக்கு பின் கோப்பையுடன் காபி அருந்தினார்.

ஷ்ரேயாஸ் ஐயர்

ஷ்ரேயாஸ் ஐயரும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினார். 5 போட்டிகளில் 243 ரன்கள் குவித்தார். கோப்பையை முத்தமிட்டு புகைப்படத்தை பகிர்ந்தார்.

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுலும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினார். 5 போட்டிகளில் 140 ரன்கள் குவித்தார். கோப்பையுடன் புகைப்படத்தை பகிர்ந்தார்.

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜாவும் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்தார். வெற்றியின் பின்னர் கோப்பையுடன் மனைவி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.

ஹர்திக் பாண்டியா

இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் கோப்பையுடன் புகைப்படம் பகிர்ந்துள்ளார். அவரது ரியாக்ஷன் பார்க்கும்படி இருந்தது.

அக்சர் படேல்

இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அக்சர் படேல் கோப்பையை கையில் ஏந்தி புகைப்படம் பகிர்ந்துள்ளார்.

விராட் கோலி

விராட் கோலியின் புகைப்படத்தை ஐசிசி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது. அந்த புகைப்படத்தில் கோலி ஒரு ராஜா போல் இருக்கிறார்.

ரோஹித் சர்மா

இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் புகைப்படமும் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. கோப்பையுடன் ரோஹித் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

சுப்மன் கில்

சுப்மன் கில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியுடன் தூங்குவது போல் புகைப்படம் பகிர்ந்துள்ளார். இந்த ட்ரெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஓடிஐயில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் யார்? யார்?

ODI கிரிக்கெட்டில் டாஸ் கேட்க ராசியே இல்லாத கேப்டன்கள்

பிராக்டிஸ் என்னாச்சி? துபாயில் ஜாலியாக ஊர் சுற்றும் இந்திய வீரர்கள்

இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரரான சுப்மன் கில்! எப்படி?