கோடை காலத்தில் ஏசி பயன்பாடு அதிகரிப்பதால் கரண்ட் பில் அதிகமாக வருகிறது. அதை எப்படி குறைப்பது என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
life-style Apr 25 2026
Author: Rayar r Image Credits:Pinterest
Tamil
ஏசி இல்லாமல் இருப்பது ரொம்ப கஷ்டம்
வெயில் கடுமையாக இருப்பதால், ஏசி இல்லாமல் இருப்பது மிகவும் கடினமாகிவிட்டது. குறிப்பாக சென்னையில் வசிக்கும் மக்கள், ஏசி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.
நீங்கள் மின்சாரத்தை சேமிக்க முடியும். உங்கள் ஏசியில் ஒரு சின்ன செட்டிங்கை மாற்றுவதன் மூலம், மின்சார செலவைக் கட்டுப்படுத்தலாம். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.
Image credits: Pinterest
Tamil
வெப்பநிலைக்கும் பில்லுக்கும் உள்ள கணக்கு
வெப்பநிலைக்கும் கரண்ட் பில்லுக்கும் உள்ள கணக்கை புரிந்துகொள்ள வேண்டும். ஏசியின் வெப்பநிலையை ஒவ்வொரு 1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்போதும், 6 சதவிகிதம் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
Image credits: Pinterest
Tamil
பெரிய அளவில் மின்சார சேமிப்பு
அதாவது, நீங்கள் ஏசியை 18 டிகிரிக்கு பதிலாக 24 டிகிரியில் இயக்கினால், சுமார் 36 சதவிகிதம் மின்சாரத்தை சேமிக்க முடியும். இது உங்கள் கரண்ட் பில்லில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.