மார்க்கெட்டில் கிடைக்கும் மாம்பழங்கள் இயற்கையாகப் பழுத்தவையா அல்லது கால்சியம் கார்பைடு போன்ற ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டவையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
Image credits: Getty
Tamil
தண்ணீர் சோதனை
ஒரு பக்கெட் நிறைய தண்ணீரில் மாம்பழங்களைப் போடுங்கள். பழங்கள் தண்ணீரின் அடிக்குச் சென்றால், அவை இயற்கையாகப் பழுத்தவை. அவை மேலே மிதந்தால், அவற்றை ரசாயனம் கொண்டு பழுக்க வைத்தவை
Image credits: Getty
Tamil
அழுத்திப் பாருங்கள்
பழத்தை அழுத்தும்போது அது மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். பார்க்க மஞ்சளாக தெரிந்தாலும், அழுத்தும் போது சில இடங்களில் கடினமாக இருந்தால், அது இன்னும் பழுக்கவில்லை என்று அர்த்தம்.
Image credits: Getty
Tamil
நிறத்தை வைத்தும் கண்டுபிடிக்கலாம்
இயற்கையாக பழுத்த பழம் முழுவதும் ஒரே நிறத்தில் இருக்காது. ஆங்காங்கே பழம் முழுவதும் ஒரு புள்ளி கூட இல்லாமல் இருந்தால், நீங்கள் சந்தேகப்பட வேண்டும்.
Image credits: Getty
Tamil
வாசனைத்துப் பாருங்கள்
பழத்தின் காம்புப் பகுதியில் முகர்ந்து பார்த்தால், நல்ல வாசனை வரும். ரசாயனம் மூலம் பழுக்க வைத்தால், அதில் எந்த வாசனையும் இருக்காது அல்லது ஒருவிதமான கெமிக்கல் வாடை வரும்.
Image credits: Getty
Tamil
வெட்டிப் பாருங்கள்
சதைப்பகுதி அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வெளியே மஞ்சளாக இருந்தாலும், உள்ளே சதைப்பகுதி வெள்ளையாகவோ அல்லது வெளிறிய மஞ்சளாகவோ இருந்தால், அது ரசாயனங்களால் பழுக்க வைக்கப்பட்டது
Image credits: Getty
Tamil
இப்படிச் செய்வது பாதுகாப்பானது
பழங்களைச் சாப்பிடுவதற்கு முன்பு, குறைந்தது 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, பிறகு நன்கு கழுவிச் சாப்பிடுவது மிகவும் பாதுகாப்பானது.