india

ஜெகனாபாத் கோவில் நெரிசல்

ஜெகனாபாத்தில் துயரம்

சாவன் மாத சோமவாரத்தை முன்னிட்டு பீகாரின் ஜெகனாபாத்தில் உள்ள சித்தேஸ்வர்நாத் கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பூக்கடைக்காரர்களால் சோகம்

ஜெகனாபாத்தில் நடைபெற்ற சாவன் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கோயிலுக்கு அருகில் பூக்கடைக்காரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

பக்தர்கள் கூட்ட நெரிசல்

இந்த தகராறு முற்றியதால், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓடியதில் நெரிசல் ஏற்பட்டது.

ஜஹாநாபாத்தில் நெரிசல்

நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய தடியடியே கூட்ட நெரிசலுக்கு காரணம் என சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

5 பெண்கள் உட்பட 7 பேர் பலி

இந்த கோவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரில் 5 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள் என தெரியவந்துள்ளது.

ஜெகனாபாத்தில் இயல்பு நிலை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர், தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Find Next One