காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சை சாரும், தேனும் கலந்து குடித்தால் செரிமான நொதிகளைத் தூண்டி, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.
ஒரு வெள்ளரிக்காயை நறுக்கி, சில ஃப்ரெஷ் புதினா இலைகளுடன் ஒரு ஜக் தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊற விடவும். வெள்ளரி உடலை நீரேற்றமாக வைக்கிறது, புதினா பித்தநீர் சுரப்பை மேம்படுத்துகிறது.
ஒரு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேனுடன் கலக்கவும். செரிமானத்தை அதிகரிக்க, உணவுக்கு 15–20 நிமிடங்களுக்கு முன் இதைக் குடிக்கவும்.
சில துண்டுகள் இஞ்சியை தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர் எலுமிச்சை சாறு, தேன் சேர்க்கவும். இஞ்சி குடலில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, வயிறு உப்புசத்தைப் போக்கும்.
ஃப்ரெஷ் கற்றாழை ஜெல்லை ஒரு கிளாஸ் தண்ணீர், சிறிது எலுமிச்சை சாறுடன் சேர்த்து பிளெண்ட் செய்யவும். கற்றாழைக்கு உள்ள மலமிளக்கி பண்பு வயிற்றின் சுவரை இதமாக்கி, அழற்சியைக் குறைக்கும்.
ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வடிகட்டிக் குடிக்கவும். வயிறு உப்புசம், தசைப்பிடிப்பு குறையும். இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது.
பசலைக் கீரை, வெள்ளரி, பச்சை ஆப்பிள், இஞ்சி, எலுமிச்சை சாற்றை தேங்காய்த் தண்ணீருடன் பிளெண்ட் செய்யவும்.இதில் உள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செரிமான மண்டலத்தை சுத்தம் செய்யும்.
அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலக்கவும். மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு, ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்க உதவும்.