business
டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 8 வர்த்தக அமர்வுகளில் 7 இல் பங்கு சரிவுடன் முடிவடைந்தது.
வெள்ளிக்கிழமை பிப்ரவரி 28 அன்றும் டாடா மோட்டார்ஸ் பங்கு 4.27% சரிந்து 620.55 ரூபாய்க்கு முடிவடைந்தது.
ஒரு கட்டத்தில் பங்கு 618.45 ரூபாய் வரை சரிந்தது. அதே நேரத்தில், அதிகபட்சமாக 645.65 ரூபாய் என்ற அளவையும் பங்கு தொட்டது.
டாடா மோட்டார்ஸ் பங்கு அதன் 52 வார அதிகபட்ச அளவான 1179 ரூபாயிலிருந்து சுமார் 50% சரிந்து பாதியாக குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பங்கின் பலவீனத்திற்குப் பிறகும் பல ஆய்வாளர்கள் பங்கு குறித்து நம்பிக்கையுடன் உள்ளனர். பாதிக்கும் அதிகமான ஆய்வாளர்கள் டாடாவின் பங்குகளை வாங்க பரிந்துரைக்கின்றனர்.
டாடா மோட்டார்ஸ் பங்குக்கான 3 ஆய்வாளர்களின் இலக்கு இன்னும் 1000 ரூபாய்க்கு மேல் உள்ளது. ஹைடாங் செக்யூரிட்டீஸ் பங்குக்கு அதிகபட்சமாக 1300 ரூபாய் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதே நேரத்தில் ஆக்சிஸ் கேபிடல் மற்றும் ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் டாடா மோட்டார்ஸ் பங்குக்கு 1100 ரூபாய் இலக்கு நிர்ணயித்துள்ளன.
34 ஆய்வாளர்களில் 20 பேர் இதில் முதலீடு செய்ய பரிந்துரைத்துள்ளனர். 9 பேர் முதலீட்டைத் தக்க வைத்துக் கொள்ளவும், மேலும் 5 பேர் விற்கவு அறிவுறுத்தியுள்ளனர்.
பிப்ரவரியில் மட்டும் டாடா மோட்டார்ஸ் பங்கு 13 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. இதற்கு முன்பு அக்டோபரில் பங்கு 14 சதவீதம் சரிந்தது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பல்வேறு அபாயங்களுக்கு உட்பட்டது. எந்தவொரு பங்கிலும் முதலீடு செய்வதற்கு முன் ஒரு நல்ல நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.