விஜய்யின் தவெக மாநாடு தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் – சீமான்!

TVK Maanadu: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்று வருகிறது. சீமான் வாழ்த்து தெரிவித்து, மாநாடு தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், மாநாட்டில் வைக்கப்பட்டிருக்கும் கட் அவுட் குறித்தும் பேசியுள்ளார்.

First Published Oct 27, 2024, 3:59 PM IST | Last Updated Oct 27, 2024, 4:25 PM IST

TVK Maanadu: தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள வி சாலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தவெக கட்சியின் தீம் பாடலான தமிழன் கொடி பறக்குது; தலைவன் யுகம் பொறக்குது என்ற பாடலுடன் மாநாட்டு நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பெற்றோர் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் வருகை தந்துள்ளனர்.

விஜய்யின் வி சாலை டிவிகே மாநாட்டுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் நாம் தலைவர் கட்சியின் தலைவரான சீமானும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதோடு மாநாடு குறித்தும் பேசியுள்ளார். விக்கிரவாண்டி மாநாடு தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தம்பி விஜய் கண்டிப்பாக அதனை செய்வார். நாங்கள் வரும் போது இந்தளவிற்கு எங்களுக்கு இல்லை என்றார்.

மேலும், டிவிகே மாநாட்டில் வைக்கப்பட்டிருக்கும் கட் அவுட் குறித்தும் பேசினார். அதில் ஏன், அறிஞர் அண்ணாவின் கட் அவுட் இல்லை என்பது குறித்து விளக்கினார். மேலும், தனது கட்சி கொடிக்கும், டிவிகே கட்சி கொடிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை குறித்தும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories