Asianet News TamilAsianet News Tamil

சிலர் மைக்கை பார்த்தாலே கோபம் வருது.. பாஜக தலைவர் அண்ணாமலையை தாக்கி பேசிய ஜெயக்குமார்

சிலர் மைக்கை  பார்த்தாலே கோபப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பென்ஜமின் உட்பட பல அதிமுக பிரமுகர்கள் கலந்து கலந்துக்கொண்டார்கள். 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் விவவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதிர்ச்சியற்று செயல்படுவதாகவும், ஆளுநர் குறித்து திமுகவினர் ஒருமையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. கோபத்தை விடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் பண்போடு செயல்பட வேண்டும்.

சிலர் பத்திரிக்கையாளர்களின் மைக்கை கண்டாலே டென்ஷன் ஆவதாக பாஜக தலைவர் அண்ணாமலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறைமுகமாக தாக்கி விமர்சித்தார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என ஓபிஎஸ் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, சசிகலா, தினகரன்,ஓபிஎஸ் ஒன்றுபட்டால் அவர்களுக்கு தான் வாழ்வு எனவும் தமிழக மக்களுக்கு எந்த வாழ்வும் இல்லை.

பொதுக்குழுவால்  நீக்கப்பட்ட சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மூடப்பட்ட அதிமுக கதவுகள் மீண்டும் திறக்காது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டு இருக்கிறது. இது பற்றி பேசுவதற்கு ஆளுநர் டெல்லி சென்றிருப்பதாகவும் ஆனால் திமுக கொடுத்த புகாரின் அடிப்படியிலேயே ஆளுநர் விசாரணைக்காக டெல்லி சென்றிருப்பதாக பொய்யான பிம்பத்தை திமுகவினர் ஏற்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

இதையும் படிங்க..2 ஆர்வக்கோளாறுகள்! உருட்டாமல் இருந்தால் சரி! விமான விவகாரத்தில் அண்ணாமலையை கிழித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

Video Top Stories