Asianet News TamilAsianet News Tamil

கணவன் இல்லாத நேரத்தில் இன்ஸ்பெக்டருடன் பெண் போலீஸ் உல்லாசம்.. ஒளிந்திருந்து பிடித்த போலீஸ் கணவன்.

கணவன் இல்லாத நேரங்களில் உடன் பணியாற்றும் போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டரை வீட்டுக்கு அழைத்து வந்து பெண் போலீஸ் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில் கணவனிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். இச்சம்பவம் தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடந்துள்ளது.


 
 

When the husband is away, he brings the inspector to the house and has sex with the female cop.
Author
First Published Oct 7, 2022, 5:16 PM IST

கணவன் இல்லாத நேரங்களில் உடன் பணியாற்றும் போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டரை வீட்டுக்கு அழைத்து வந்து பெண் போலீஸ் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில் கணவனிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். இச்சம்பவம் தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடந்துள்ளது.

சமூக விரோதிகள் அச்சுறுத்தல் இன்றி மக்கள் வசிப்பதை உறுதி செய்ய வேண்டிய துறை காவல் துறை.  தவறு செய்பவர்களை திருத்துவது மட்டும் இன்றி சமூக விரோத சக்திகளை களையெடுக்க வேண்டிய துறையும் காவல்துறைதான். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையிலேயே பலர் முறை தவறி செய்யும் செயல்கள் ஒட்டுமொத்த காவல் துறைக்கும் சில நேரங்களில் தலைகுனிவை ஏற்படுத்தி விடுகிறது. இந்த வரிசையில் பெண் போலீஸ் ஒருவர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், போலீஸ் கணவனிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. 

When the husband is away, he brings the inspector to the house and has sex with the female cop.

முழு விபரம் பின்வருமாறு:- தெலுங்கானா மாநிலம் ஒருங்கிணைந்த வாரங்கல்  மாவட்டம் சிஐடி அலுவலகத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிபவர்  பாலபத்ர ரவி,  இவருக்கும் ஹனுமகுண்டா ராம் நகர் பெண் சர்க்கிள் இன்ஸ்பெக்டரும்  ஒரே பிரிவில் சிஐயாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பாலபத்ர ரவியும் அந்தப் பெண் காவலரும் நெருங்கி பழகி வந்தனர். அதில் இருவருக்குமிடையே கள்ளக் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். நிலையில் மனைவியின் நடத்தையில் கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:  ஆண்டிகளை வைத்து மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. உள்ளே புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்.!

எனவே அந்தப் பெண் போலீசின் கணவரும் வரு போலீஸ் என்பதால் தன் மனைவியை நோட்டமிட்டு வந்தார். இந்நிலையில் அந்த பெண் காவலர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பாலபத்ர ரவியை  வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருத்தார். அப்போது மறைந்திருந்த அவரது கணவர் அவர்களை கையும் களவுமாக பிடித்தார்.

இதையும் படியுங்கள்: என்னை மட்டையாக்கிவிட்டு என் மனைவியுடன் மாஜாவாக இருப்பான்! கள்ளக்காதல் விவகாரத்தில் பிரகாஷ் கொலை! வெளியான பகீர்

அந்தப் பெண் காவலரின் கணவர் மகபூப்நகர் மாவட்டத்தில் சிஐடி ஆக பணியாற்றி வருபவர் ஆவார். இந்நிலையில் தனது மனைவியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பாலபத்ர ரவியை வாரங்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட சுபேதார் காவல் நிலையத்தில் அவர் ஒப்படைத்தார்.

When the husband is away, he brings the inspector to the house and has sex with the female cop.

மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தான் வீட்டில் இல்லாத நேரங்களில் தனது வீட்டிற்கு வந்தது மட்டுமின்றி, தன்னை கொலை செய்து விடுவதாக பாலபத்ர ரவி தன்னை மிரட்டி வருவதாகவும் அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது, இதை சுபேதார் போலீசார் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் பெண் காவலருக்கும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்க்கும் இடையேயான ரகசிய உறவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios