ஆண்டிகளை வைத்து மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. உள்ளே புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்.!

By vinoth kumarFirst Published Oct 7, 2022, 3:10 PM IST
Highlights

வாடகைக்கு வீடு எடுத்து ரகசியமாக விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

வாடகைக்கு வீடு எடுத்து ரகசியமாக விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அருகே இந்திரா நகர் பகுதியில் வீடு ஒன்றில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அப்போது வீட்டில் வாலிபர் ஒருவரும் 2 பெண்களும் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். 

இதையும் படிங்க;- மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. கஸ்டமர் போல் வந்து அலேக்கா தூக்கிய போலீஸ்.!

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து, பிடிப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் ஆவரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவருடன் இருந்தது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது பெண் என்பதும், மற்றொருவர் விருதுநகரை சேர்ந்த 43 வயது பெண் என்பதும் அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையும் படிங்க;-  மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. கஸ்டமர் போல் வந்து அலேக்கா தூக்கிய போலீஸ்.!

இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் அவர்கள் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆண்களை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு இங்கு வரவழைத்து விபசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

click me!