கோவையில் பொறியியல் மாணவரை நிர்வாணப்படுத்தி ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய கொடூரம்; போலீஸ் வலை

By Velmurugan sFirst Published Dec 13, 2023, 4:56 PM IST
Highlights

கோவை சரவணம்பட்டி அருகே என்ஜினியரிங் மாணவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து நிர்வாணப்படுத்தி பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு மாணவனை தாக்கிச் சென்ற 4 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலை.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான  என்ஜினீயரிங் மாணவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கி இருந்து ஒரு பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவர் ஓரின சேர்க்கையாளர்களுக்கான செயலி ஒன்றில் அடிக்கடி தகவல் பகிர்ந்து வந்துள்ளார். இந்த செயலியில் அறிமுகமான வாலிபர் ஒருவர் ஓரின சேர்க்கையில் ஈடுபட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

ராமஜெயம் கொலை விசாரணை வலையத்தில் இருந்த நபரை படுகொலை செய்த 4 பேர் சரண்

இதனையடுத்து மாணவர்  நேற்று மாலை சரவணம்பட்டி பூந்தோட்டம் நகர் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவருடன் மாணவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மேலும் 3 பேர் அங்கு வந்துள்ளனர். நால்வரும் மாணவரை தாக்கி  ஆடைகளை  கழற்றி நிர்வாண படுத்தி கொடுமைபடுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர்  மாணவரின் செல்போனை பறித்த கும்பல் மாணவனின் வங்கி கணக்கில் இருந்து  ரூ.11 ஆயிரத்தை தங்கள் கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனையடுத்து அந்த கும்பல் மாணவரின் செல்போனை பறித்து கொண்டு  4 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.‌ தாக்குதலில் உடல் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மாணவர் இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!