பள்ளிக் கூடத்தில் 20 மாணவிகளுக்கு பிராக்கெட்.. ஷிப்ட் போட்டு உல்லாசம்.. 9 ஆம் வகுப்பு மாணவன் வெறித்தனம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 12, 2022, 12:31 PM IST
Highlights

தன்னுடன் படிக்கும் சக மாணவிகளை போதைக்கு அடிமையாகி அவர்களுடன் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

தன்னுடன் படிக்கும் சக மாணவிகளை போதைக்கு அடிமையாகி அவர்களுடன் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்த மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.

சமீபகாலமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்தும்  நிலை ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்: பள்ளி வகுப்பறைக்குள் எல்லை மீறிய மாணவர்கள்! கட்டிப்பிடித்து கண்ட இடத்தில் கை வைத்து நெருக்கம்! வீடியோ வைரல்.!

வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்கள் மாநிலம் விட்டு மாநிலகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதானல் இளைஞர்கள் எளிதாக போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் சூழல் அதிகரித்துள்ளது. இதில் போதைப் பொருட்களை பயன்படுத்தி பள்ளி மாணவிகளை அடிமையாக்கி 20க்கும் மேற்பட்ட மாணவிகளை ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.

இதையும் படியுங்கள்: எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. ஆத்திரத்தில் இருந்த கணவர் என்ன செய்தார் தெரியுமா?

கேரள மாநிலம் கண்ணூர், பிரபல தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அப்பள்ளியில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவி ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் அந்த மாணவியுடன் மாணவர் ஒருவர் நெருங்கி பழகி வந்தார், அடிக்கடி அந்த மாணவியின் வீட்டுக்கு செல்வது, அவர்களின் பெற்றோர்களுடன் பேசுவது என்ன சகஜமாக இருந்து வந்துள்ளார். இதனால் அந்த மாணவன் மீது மாணவி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. வேறு மாநிலத்தில் பயின்று விட்டு புதிதாக கேரளாவுக்கு வந்த நிலையில் அந்த மாணவிக்கு மனதளவில் பாதிப்பு இருந்ததாக தெரிகிறது.

இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த மாணவன் அந்த மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்துள்ளார், இதை எடுத்துக்கொண்டால் உற்சாகம் பிறக்கும் நன்கு படிக்கலாம் என அந்த  மாணவியை போதைப்பொருள் பயன்படுத்த தூண்டியுள்ளார். பின்னர் மாணவி அதை பயன்படுத்த தொடங்கினார், ஒரு கட்டத்தில் போதை பொருள் இல்லாமல் தூங்க முடியாத நிலைக்கு அந்த மாணவி தள்ளப்பட்டார். அதை பயன்படுத்திய மாணவியை மிரட்டி அவருடன் பலமுறை அம்மாணவன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். 

பின்னர் அம்மாணவியை பலாத்காரம் செய்யும் காட்சிகளை செல்போனில் பதிவு செய்து வந்துள்ளார், இந்நிலையில் மாணவனின் செல்போனில் இருந்த ஆபாச காட்சிகளை தற்செயலாக மாணவியின் பெற்றோர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கண்ணுர் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.பின்னர் போலீசார் அந்த வில்லங்க மாணவனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்து வந்ததை ஒப்புக் கொண்டார்.

அதுமட்டுமின்றி 20க்கும் மேற்பட்ட மாணவிகளை இதேபோல போதை பொருள் கொடுத்து அவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டு வந்ததையும் அந்த மாணவன் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த மாணவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். 
 

click me!