Asianet News TamilAsianet News Tamil

கடவுளாக மாறிய விஜயகாந்த்..! மகன் படிப்புக்கு கேப்டன் நினைவிடத்தில் கண்ணீர் விட்ட ஏழை தாய்க்கு பாலா செய்த உதவி!

மகனின் படிப்பு செலவுக்கு காசில்லாமல், விஜயகாந்த் நினைவிடம் வந்து வேண்டிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த KPY பாலாவிடம் அவர் உதவி கேட்க, அவர் தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் கொடுத்து உதவியுள்ளார்.
 

கைநிறைய பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால், அதனை கண்ணும் கருத்துமாக சேர்த்து வைப்பவர்கள் மத்தியில், தொடர்ந்து பிறருக்கு தன்னால் முடிந்த வரை உதவி செய்து வருகிறார் பாலா. இதுவரை தனக்கென ஒரு கார் கூட வாங்கி கொள்ளாமல், மலை கிராமம், மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு 5 ஆம்புலன்ஸ், ஆட்டோ, மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் போன்றவற்றை தொடர்ந்து வாங்கி கொடுத்து வருகிறார்.

அதே போல் தன்னிடம் உதவி என கேட்பவர்களுக்கு, தன்னால் முடிந்த வரை உதவி செய்து வருகிறார். இவர் செய்த உதவியை கௌரவிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சி ஒன்று விருது வழங்கி பாலாவை கௌரவித்தது.

அந்த விருதோடு, கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் வந்த பாலாவிடம்... கணவரை இழந்த ஏழை தாய் ஒருவர் மகனின் படிப்புக்கு உதவி கேட்க, தன்னுடைய கையில் இருந்த அனைத்து பணத்தையும் கொடுத்து உதவியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

Video Top Stories