ஆசிய கோப்பை: இன்று இந்தியாவும், தென் கொரியாவும் நேருக்கு நேர் மோதல்…
பத்தாவது ஆசிய கோப்பை வலைகோள் பந்தாட்டப் போட்டி இன்று இந்தியாவும், தென் கொரியாவும் மோதுகின்றன.
பத்தாவது ஆசிய கோப்பை வலைகோள் பந்தாட்டப் போட்டி இன்று நடைபெறுகிறது.
பத்தாவது ஆசிய கோப்பை வலைகோள் பந்தாட்டப் போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது.
இதில், "சூப்பர் 4 ஸ்டேஜ்' ஆட்டத்தில் இந்தியாவும், தென் கொரியாவும் எதிர்கொள்கின்றன. இந்த ஆட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
குரூப் சுற்றில் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் அபார வெற்றிக் கண்டுள்ளது இந்திய அணி. எனவே, இந்த ஆட்டத்திலும், தென் கொரியாவை தோற்கடித்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
அதேசமயத்தில் தென் கொரியாவையும் எளிதாக நினைத்துவிடக் கூடாது. அந்த அணி தனது பிரிவில் 2-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. முதல் இடத்தை பிடிக்ககூடிய அளவுக்கு அதற்கு திறமை வாய்ந்த வீரர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.