நம்ம தலைவரு ஸ்டாலின் வேற லெவல்... இந்திய அரசியல்ல இன்னும் 50 வருஷத்துக்கு அவர் தான்!! தூள் கிளப்பிய துரைமுருகன்!
இந்திய அரசியலில் இன்னுமொரு 50 ஆண்டு காலத்திற்கு துருவ நட்சத்திரமாக இருந்து ஒளிரக்கூடியவர் நம்முடைய தலைவர் ஸ்டாலின் என துரை முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதியில் மலரஞ்சலி செலுத்தினர்.
இதனை அடுத்து ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் துரை முருகன், இந்த மாபெரும் விழாவிற்கு தலைமை ஏற்று வழிநடத்த இருக்கிறவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின்.திராவிட முன்னேற்ற கழகத்தை வழி நடத்துவதற்கு தலைவர் இல்லையே என்ற ஏக்கம் எவருக்கும் ஏற்படாவண்ணம் இந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துகிறார்.
எதிரிகள் நம்மை வீழ்த்துவதற்காக வகுக்கின்ற வியூகங்களை தலைவரிடம் அவர் கற்ற ராஜதந்திர முறைகளைக் கொண்டு உடைத்து எரிவதிலும் சரி, சட்டமன்றத்தில் கேள்வி என்ற சரணங்களை சரமாரியாக தொடுப்பதிலும் சரி, மந்திரிகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தி அவர்களை தோலுரித்து காட்டுவதிலும் சரி, தூய அன்பு காட்டி அரவணைத்து செல்வதிலும் சரி, அன்னை சோனியா இடத்திலே ஒரு பிள்ளையாக மாறி இருப்பதும் சரி, தன்னிகரில்லா தலைவராக விளங்கக் கூடியவர் நமது ஸ்டாலின்.
தொடர்ந்து பேசிய அவர், என்னுடைய அரசியல் கணக்குப்படி அகில இந்திய அரசியலில் இன்னுமொரு 50 ஆண்டு காலத்திற்கு துருவ நட்சத்திரமாக இருந்து ஒளிரக்கூடியவர் நம்முடைய தலைவர் ஸ்டாலின். எனவே எங்களை மட்டும் அல்ல, இயக்கத்தை மட்டுமல்ல நாளைய தமிழகத்தையே வழிநடத்துபவர் நம் ஸ்டாலின் என்றார்.